நான் வேலைதான் செய்கிறேன், மந்திரம் செய்யவில்லை…. சம்பளத்தை உயர்த்தாததால் ஊழியரின் 'வேற லெவல்' ராஜினாமா கடிதம்…. சிரிப்பலையை கிளப்பிய வைரல் பதிவு….!!
SeithiSolai Tamil October 24, 2025 01:48 AM

தான்சானியாவில் ஜே டெகர் என்ற கட்டுமான நிறுவனத்தில் ஏ.சி. மின்சா என்ற ஊழியர் வேலை செய்தார். அவர் ராஜினாமா செய்ய கடிதம் எழுதினார். அதில், “அன்பான சார், இந்த நிறுவனம் இலக்கை அதிகரிக்கிறது. ஆனால் சம்பளத்தை அதிகரிப்பது இல்லை. நான் வேலை தான் செய்கிறேன். மந்திரம் செய்யவில்லை. அதனால் ராஜினாமா செய்கிறேன்” என்று எழுதியிருந்தார். இந்த கடிதம் பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் ரொம்ப பரவி ஊழியரின் கோபம் தெரிந்தது. கடிதத்தில் நிறுவன முத்திரை இருப்பதால் உண்மையானது.

இந்த நிறுவனமே கடித படத்தை இன்ஸ்டாகிராமில் போட்டது. சிலர் சிரித்தனர். ஆனால் பலர் ஊழியருக்கு ஆதரவு சொன்னார்கள். நிறுவனம் ஊழியர்களுக்கு நல்ல சம்பளம், மரியாதை கொடுக்கவில்லை என்றால் வளராது. மின்சாவின் சிறிய கடிதம் அனைத்து நிறுவனங்களுக்கும் உதாரணம்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.