7 வது நாளாக ஒகேனக்கல்லில் குளிக்கத் தடை ... சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
Dinamaalai October 27, 2025 09:48 AM

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகமும் கர்நாடகாவும் சேர்ந்த நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதன் தாக்கமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து ஒருகாலம் அதிகரித்த நிலையில், தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்த நிலையில், நேற்று காலை 6 மணிக்கு அது 32 ஆயிரமாகவும், மதியம் 2 மணிக்கு 28 ஆயிரம் கனஅடியாகவும் குறைந்தது.

இருப்பினும், ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய இடங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நடைபாதைகள் முழுவதும் நீர் பெருக்கெடுத்து ஓடியது. காவிரி ஆற்றின் நீர்வரத்து மாறுபாடு காரணமாக, பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.

நீர்வரத்து நிலையற்ற நிலையில் இருப்பதால், ஒகேனக்கல்லில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நேற்று 6வது நாளாகவும், பரிசல் இயக்க தடை 5வது நாளாகவும் நீடித்தது. இதனால் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளை பயன்படுத்தி வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.