நாளை மறுநாள் முதல் இந்த பகுதிக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..!
Top Tamil News October 30, 2025 09:48 PM
 கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை ஐகோர்ட்டு வெளியிட்ட உத்தரவின்படி கோவை மாவட்டம் வால்பாறைக்கு வரும் நவம்பர் 1-ந்தேதி முதல் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. எனவே வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கட்டாயம் இ-பாஸ் பெற்று பயணம் செய்ய வேண்டும்.

சுற்றுலா பயணிகள் தங்களின் வாகனங்களுக்கு இ-பாஸ் பெறுவதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் ஆழியார், சோலையார் சோதனை சாவடிகளிலும் இ-பாஸ் பெறலாம். இ-பாஸ் இல்லாத வாகனம் வால்பாறைக்குள் அனுமதிக்கப்படாது. வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வரக் கூடாது.

சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்று வருவதை கண்காணிக்க வருவாய்த்துறையினர், வனத்துறையினர், காவல்துறையினர் மற்றும் உள்ளாட்சித்துறையினர் சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.