ஶ்ரீராமஜயம் ஜய்ஸ்ரீராம் ஜய்ஸ்ரீராம்
||श्री:|| !!ஸ்ரீ:!!
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
மார்கழி ~ 3 (18.12.2025 )* வியாழன் கிழமை.
வருடம் ~ விச்வாவஸு {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ தக்ஷிணாயனம்
ருது ~ ஹேமந்த ருது.
மாதம் ~ மார்கழி மாஸம் { தனுர் மாதம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ சதுர்த்தசி
நாள் ~ {குரு வாஸரம்} வியாழன் கிழமை.
நட்சத்திரம் ~ 9.39 pm வரை அனுஷம் பின் கேட்டை
யோகம் ~ த்ருதி
கரணம் ~ பத்ரம்
அமிர்தாதியோகம்~ சுபயோகம்.
நல்ல நேரம் ~ காலை 10.30 ~ 11.30 & மாலை 5.00 ~ 6.00.
ராகு காலம்~ மதியம் 1.30 ~ 3.00.
எமகண்டம் ~ காலை 6.00 ~ 7.30.
குளிகை ~ காலை 9.00 ~ 10.30.
சூரிய உதயம் ~ காலை 6.28
சந்திராஷ்டமம் ~ மேஷம்
சூலம் ~ தெற்கு.
பரிகாரம் ~ நல்லெண்ணெய்.
ஸ்ராத்ததிதி ~ சதுர்த்தசி
இன்று ~
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु!!
॥ॐ शान्तिः शान्तिः शान्तिः |!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!
sarathambal
சுப ஓரைகள்: அவரவர் இருப்பிடத்தில் சூரிய உதயத்திற்கு தகுந்தவாறு நேரத்தை கூட்டி, குறைத்து கொள்ளவும்.
காலை :
சுக்கிர ஓரை 08.01 முதல் 09.00 வரை
புதன் ஓரை 09.01 முதல் 10.00 வரை
பகல் :
குரு ஓரை 12.01 முதல் 01.00 வரை
சுக்கிர ஓரை 03.01 முதல் 04.00 வரை
புதன் ஓரை 04.01 முதல் 05.00 வரை
இரவு :
குரு ஓரை 07.01 முதல் 08.00 வரை
astrology panchangam rasipalan dhinasari 2
இன்றைய ராசிபலன்கள்
பழைய பிரச்சனைகள் மீண்டும் தொடங்கும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். பேச்சுகளில் கனிவு வேண்டும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் புதிய முடிவுகளை தவிர்க்கவும். அதிகாரிகளிடத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். விரயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
அஸ்வினி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பரணி : கனிவு வேண்டும்.
கிருத்திகை : வாதங்கள் நீங்கும்.
வியாபாரத்தில் அறிமுகம் மேம்படும். குடும்ப உறுப்பினர்களுடன் மனம் விட்டு பேசவும். மற்றவருக்கு உதவுவது திருப்தியையும் தரும்.காரிய அனுகூலம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் சாதகமாகும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
கிருத்திகை : அறிமுகம் மேம்படும்.
ரோகிணி : அனுகூலம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : ஒப்பந்தங்கள் சாதகமாகும்.
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த காரியம் கைகூடும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்ப்புகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வருமானம் தேவைக்கு இருக்கும். வாகன பராமரிப்பில் கவனம் வேண்டும். நிறைவு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மிருகசீரிஷம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
திருவாதிரை : இன்னல்கள் மறையும்.
புனர்பூசம் : கவனம் வேண்டும்.
எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். புதுமையான செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு மேம்படும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோக பணிகளில் கவனம் வேண்டும். தெளிவுகள் பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்
புனர்பூசம் : ஆர்வம் மேம்படும்.
பூசம் : புரிதல் உண்டாகும்.
ஆயில்யம் : கவனம் வேண்டும்.
மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தாய்மாமன் வழியில் சுபச்செய்தி கிடைக்கும். குடும்ப விஷயமாக அலைச்சல் உண்டாகும். நிலுவையில் இருந்த வரவுகள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணியாளர்களால் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பரிவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : குழப்பம் நீங்கும்.
பூரம் : வரவுகள் கிடைக்கும்.
உத்திரம் : சிக்கல்கள் குறையும்.
செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். பழைய கடன் பிரச்சனைகள் குறையும். வருமானத்தில் இருந்த தடை விலகும். திட்டமிட்ட காரியத்தில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிலும் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை அமையும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : சங்கடங்கள் விலகும்.
அஸ்தம் : தடை விலகும்.
சித்திரை : முயற்சிகள் கைகூடும்.
எதிர்பாராத சில உதவிகள் சாதகமாகும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். நண்பர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துகளால் ஆதாயம் மேம்படும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும். மனதில் இருந்த கவலைகள் குறையும். மாற்றம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீல நிறம்
சித்திரை : உதவிகள் சாதகமாகும்.
சுவாதி : ஆதாயம் மேம்படும்.
விசாகம் : கவலைகள் குறையும்.
உறவுகள் பற்றிய புரிதல் மேம்படும். எதிலும் விவேகத்துடன் செயல்படவும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். மனதில் புது விதமான சிந்தனைகள் ஏற்படும். உத்தியோகத்தில் புதிய அனுபவம் ஏற்படும். பங்குதாரர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கல்வி பணிகளில் கவனம் வேண்டும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : புரிதல் மேம்படும்.
அனுஷம் : புதுமையான நாள்.
கேட்டை : கவனம் வேண்டும்.
மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும். முயற்சியில் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். நினைத்த பணிகளில் அலைச்சல் அதிகரிக்கும். குடும்ப நலனில் அக்கறை செலுத்தவும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். எதிர்ப்புகளை சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மூலம் : குழப்பம் உண்டாகும்.
பூராடம் : அலைச்சல் மேம்படும்.
உத்திராடம் : பக்குவம் பிறக்கும்.
பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் செலவுகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பெரிய மனிதர்களின் ஆதரவால் அனுகூலம் உண்டாகும். அமைதி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
உத்திராடம் : அனுகூலமான நாள்.
திருவோணம் : பொறுப்புகள் கிடைக்கும்.
அவிட்டம் : தேவைகள் பூர்த்தியாகும்.
மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். உடல்நிலையில் இருந்த சங்கடம் விலகும். கணவன் மனைவியிடையே புரிதல் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
அவிட்டம் : சிந்தித்து செயல்படவும்.
சதயம் : சங்கடம் விலகும்.
பூரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். மேலதிகாரியுடன் இருந்த பிரச்னைகளை சரி செய்வீர்கள். வருவாயில் ஏற்ற இறக்கமான சூழல் அமையும். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். வியாபார விருத்தி சார்ந்த முயற்சிகளை எடுப்பீர்கள். புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்
பூரட்டாதி : செல்வாக்கு உயரும்.
உத்திரட்டாதி : ஏற்ற இறக்கமான நாள்.
ரேவதி : வெற்றிகரமான நாள்.
இன்றைய நற் சிந்தனைகள்
விடாமுயற்சி
ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.
உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.- Sir Winston Churchill
நான் மெதுவாக நடப்பவன்தான்; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை.
– Abraham Lincoln.
thiruvalluvar
தினம் ஒரு திருக்குறள்
நாள்தோறும் திருக்குறள் படிப்போம், நடப்போம் அதன்படி, நல்லறம் வளர்ப்போம்
அதிகாரம் : படைச்செருக்கு
குறள் 775
விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.
மு.வ உரை:
பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.
இன்றைய சிந்தனைக்கு
”யானெனும் செருக்கு மனிதர்க்குப் பகை”
‘நமக்குத்தான் அனைத்தும் தெரியும்’ என்ற செருக்குதான் மனிதனின் முதல் பகைவன், “எம்மால்தான்” அனைத்துமே இயலும், நான் அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியில்தான் முடியும்…
எந்த மனதில் ‘செருக்கு’ சூழ்ந்திருக்கிறதோ அங்கு சிக்கல்களும் இருக்கும். ’’நான்’’ அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியையே கொடுக்கும்…
மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் தடையாக இருப்பது இந்த ‘’நான்’’ எனும் செருக்குதான்… !
பணியிடமாகட்டும், மாமியார் மருமகள் உறவுகளாகட்டும், கணவன் மனைவிடையே ஆகட்டும், இங்கெல்லாம் உறவுமுறை கெடுவதற்கு இந்த கேடான எண்ணங்களே காரணம்…!
நண்பர்களிடையே பிரிவு நிகழ்வதும் இந்த எண்ணங்களினால்தான்…!
இன்று செயல்படுவோம், நாளை செயல்படுவோமா…? என்று நமக்குத் தெரியாது. இப்படியிருக்க, நமக்கு இந்த செருக்கு மிகத் தேவைதானா…? என்று சற்று ஆலோசிக்க வேண்டும்…!
ஆம் நண்பர்களே…!
‘நான்’, ‘எனது’ என்பது அறியாமை…!
‘நாம்,’ ‘நம்முடையது’ என்பது அறிவுடைமை…!!
?? நாம் வாழ்வில் முழுமையான நிலையினை அடைய விரும்பினால், ‘’நான்’’ எனும் செருக்கினை முழுமையாக அகற்றிவிடுவதே சாலச் சிறந்தது…!??
பஞ்சாங்கம் டிச.18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்! News First Appeared in Dhinasari Tamil