பொங்கலுக்கு (Pongal) இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் சென்னையில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். தீபாவளி, பொங்கல் போன்ற தொடர் விடுமுறை நாட்களில் அதிக அளவு மககள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் தாம்பரம் தொடங்கி செங்கல்பட்டு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் அப்பகுதியை கடக்கவே கூடுதலாக 4 மணி நேரமாகிறது. இதனை தவிர்க்க சென்னை போக்குவரத்து காவல்துறை தற்போது போக்குவரத்து மாறங்களை செய்துள்ளது. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெளியூருக்கு செல்லும் பொதுமக்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் விரிவான போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இந்த போக்குவரத்து மாற்றங்கள் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 12, 13, 14, 18 மற்றும் 19 ஆகிய நாட்களில் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : “தைப்பொங்கல் அல்ல, தேர்தல் பொங்கல்”.. ரூ.3,000 ரொக்கப்பரிசு குறித்து சீமான் விமர்சனம்!!
சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்பேருந்து நிலையங்களை எளிதாக அடையவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், சென்னை புறநகரில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் வாகனங்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட உள்ளன.
இதையும் படிக்க : உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்…தமிழக அரசு அரசாணை வெளியீடு!
கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை வழியாக வரும் கனரக வாகனங்கள், கோவளம் சந்திப்பு மற்றும் படூர் சந்திப்பு வழியாக நகரை சுற்றி மாற்றுப்பாதைகளில் திருப்பி விடப்படும். செங்கல்பட்டு மற்றும் வண்டலூர் பகுதிகளில் இருந்து தாம்பரம் நோக்கி வரும் வாகனங்கள், சிங்கப்பெருமாள் கோவில், வண்டலூர் வெளிவட்ட சாலை மற்றும் பழைய மேம்பாலம் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளன.