முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகையாக ₹5000 வழங்கியதைக் கண்டு பொறாமையில் பலருக்குப் பைத்தியமே பிடித்துவிட்டது என்று நடிகையும் முன்னாள் அமைச்சருமான ரோஜா அதிரடியாகத் தெரிவித்துள்ளார். இதனால்தான் சிலர் இதனை ‘பிச்சை காசு’ என்றும், மக்களைச் சோம்பேறிகளாக்கும் திட்டம் என்றும் விமர்சித்து வருவதாக அவர் சாடினார். மக்கள் நலனுக்காக ஸ்டாலின் எடுத்த இந்தத் துணிச்சலான முடிவில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்த ரோஜா, எதிர்ப்பாளர்களின் விமர்சனங்களைக் கடுமையாகச் சாடினார்.
நடுத்தர வர்க்க மக்களுக்கு ₹1000 என்பது ஒரு பெரிய விஷயம் இல்லை என்றாலும், அடித்தட்டு ஏழை எளிய பெண்களுக்கு இது மிகப்பெரிய வாழ்வாதாரம் என்று ரோஜா சுட்டிக்காட்டினார். பணக்காரர்களுக்கும் வசதி படைத்தவர்களுக்கும் அரசு சலுகைகள் கிடைக்கும்போது அமைதியாக இருப்பவர்கள், ஏழை மக்களுக்கு அரசு நிதி வழங்கினால் மட்டும் ஏன் இப்படிப் பொத்துக்கொண்டு வருகிறார்கள் என்று அவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் வகையில் பேசுபவர்களுக்குத் தக்க பதிலடி கொடுக்கும் வகையில் ரோஜாவின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.