“மகாபிரபு இங்கேயும் வந்துட்டீங்களா?” என்று மக்கள் கிண்டலடிக்கும் வகையில், இரும்பு பாத்திரங்களை அலுமினியம் என்று கூறி ஏமாற்றி விற்கும் மோசடி வடமாநிலத்தவர்களால் அரங்கேறி வருகிறது.
பார்ப்பதற்கு இரும்பு பாத்திரம் போலவே கருப்பாகவும் கனமாகவும் இருந்தாலும், உண்மையில் அவை தரம் குறைந்த இரும்பு அல்லது வேறு உலோகக் கலவையின் மேல் அலுமினியம் போன்ற பூச்சு பூசப்பட்ட போலிப் பொருட்களாக இருக்கின்றன.
குறைந்த விலைக்குக் கிடைக்கிறது என்ற ஆசையில் மக்கள் வாங்கும் இந்த பாத்திரங்கள், சமைக்கும்போது உடல் நலத்திற்குத் தீங்குகளை விளைவிக்கக் கூடியவை.
“>
எனவே, சாலையோரங்களில் அல்லது அறிமுகமில்லாத நபர்களிடம் பாத்திரங்களை வாங்கும் போது, காந்தத்தை வைத்துச் சோதித்துப் பார்ப்பதோ அல்லது நம்பகமான கடைகளில் வாங்குவதோ பாதுகாப்பானது என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.