பஞ்சாங்கம் மார்ச் 5 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
Dhinasari Tamil March 05, 2026 03:48 PM

இன்றைய பஞ்சாங்கம் – மார்ச் 5

ஶ்ரீராமஜயம் ஜய்ஸ்ரீராம் ஜய்ஸ்ரீராம்

||श्री:|| !!ஸ்ரீ:!!

श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

மாசி ~ 21 (05.3.2026* )* வியாழன் கிழமை.
வருடம் ~மாசி விச்வாவஸு {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ சிசிர ருது.
மாதம் ~ மாசி மாஸம் { கும்ப மாதம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ 6.05 pm வரை த்விதியை பின் த்ருதியை
நாள் ~ {குரு வாஸரம்} வியாழன் கிழமை.
நட்சத்திரம் ~ 9-12 am வரை உத்திரம் பின் ஹஸ்தம்
யோகம் ~ சூலம்
கரணம் ~ கரஜை
அமிர்தாதியோகம்~ அசுபயோகம்
சுபயோகம்
நல்ல நேரம் ~ காலை 10.30 ~ 11.30 & மாலை 5.00 ~ 6.00.
ராகு காலம்~ மதியம் 1.30 ~ 3.00.
எமகண்டம் ~ காலை 6.00 ~ 7.30.
குளிகை ~ காலை 9.00 ~ 10.30.
சூரிய உதயம் ~ காலை 6.30
சந்திராஷ்டமம் ~ கும்பம்
சூலம் ~ தெற்கு.
பரிகாரம் ~ நல்லெண்ணெய்.
ஸ்ராத்ததிதி ~ த்விதியை
இன்று ~

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु!!
॥ॐ शान्तिः शान्तिः शान्तिः |!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!

sarathambal

சுப ஓரைகள்: அவரவர் இருப்பிடத்தில் சூரிய உதயத்திற்கு தகுந்தவாறு நேரத்தை கூட்டி, குறைத்து கொள்ளவும்.

காலை :
சுக்கிர ஓரை 08.01 முதல் 09.00 வரை
புதன் ஓரை 09.01 முதல் 10.00 வரை

பகல் :
குரு ஓரை 12.01 முதல் 01.00 வரை
சுக்கிர ஓரை 03.01 முதல் 04.00 வரை
புதன் ஓரை 04.01 முதல் 05.00 வரை

இரவு :
குரு ஓரை 07.01 முதல் 08.00 வரை

astrology panchangam rasipalan dhinasari 2 இன்றைய ராசிபலன்கள்
05.03.2026 மேஷம்

நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். திட்டமிட்ட சில காரியங்கள் நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் புதுவிதமான சூழல்கள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்களால் பொறுப்புகள் குறையும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. உலகியல் நடவடிக்கை மூலம் சில மாற்றம் மனதளவில் ஏற்படும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்

அஸ்வினி : பிரார்த்தனைகள் நிறைவேறும்.
பரணி : பிரச்சனைகள் குறையும்.
கிருத்திகை : மாற்றம் ஏற்படும்.

ரிஷபம்

தன வரவுகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். உத்தியோக பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். உடன் இருப்பவர்களால் அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான பயணங்கள் உண்டாகும். இணையம் சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். நண்பர்கள் வழியில் சில உதவிகள் கிடைக்கும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தடங்கல் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும்.
ரோகிணி : பயணங்கள் உண்டாகும்.
மிருகசீரிஷம் : ஆதரவான நாள்.

மிதுனம்

பொருளாதார நெருக்கடிகள் குறையும். குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வியாபார பணிகளில் இருந்த மந்தத்தன்மை விலகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் சந்திப்புகள் மாற்றத்தை ஏற்படுத்தும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : நெருக்கடிகள் குறையும்.
திருவாதிரை : மாற்றம் உண்டாகும்.
புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும்.

கடகம்

உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். செயல்களில் திருப்தியான சூழல் அமையும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் அதிகரிக்கும். தகவல் தொடர்பு துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் ஓரளவு குறையும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்

புனர்பூசம் : ஆதரவான நாள்.
பூசம் : முன்னேற்றமான நாள்.
ஆயில்யம் : பிரச்சனைகள் குறையும்.

சிம்மம்

குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியான சூழல் உருவாகும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றம் பிறக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். பிரீதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம்

மகம் : மாற்றம் பிறக்கும்.
பூரம் : வாய்ப்புகள் அமையும்.
உத்திரம் : கலகலப்பான நாள்.

கன்னி

உடன் பிறந்தவர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். தவறிய சில வாய்ப்புகளால் சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். கூட்டு வியாபாரத்தில் பொறுமை வேண்டும். மனதில் புதுவிதமான கண்ணோட்டம் பிறக்கும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : அனுசரித்து செல்லவும்.
அஸ்தம் : சஞ்சலங்கள் நீங்கும்.
சித்திரை : புதுமையான நாள்.

துலாம்

நண்பர்களிடத்தில் விவேகத்துடன் செயல்படவும். இறை பணிகளில் ஆர்வம் ஏற்படும். உணவுகளில் சற்று கவனம் வேண்டும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். செலவுகளால் சில நெருக்கடியான சூழல் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

சித்திரை : விவேகத்துடன் செயல்படவும்.
சுவாதி : பிரச்சனைகள் குறையும்.
விசாகம் : பேச்சுகளில் கவனம்.

விருச்சிகம்

பொதுக் காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். மனை விற்பனையில் லாபம் மேம்படும். உத்தியோகம் நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

விசாகம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
அனுஷம் : இன்னல்கள் குறையும்.
கேட்டை : அனுபவம் ஏற்படும்.

தனுசு

உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். வியாபார பணிகளில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். குழந்தைகள் வழியாக மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். விளையாட்டு விஷயத்தில் கவனத்துடன் இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : அனுசரித்து செல்லவும்.
பூராடம் : மகிழ்ச்சியான நாள்.
உத்திராடம் : விழிப்புணர்வு வேண்டும்.

மகரம்

ஆன்மீக செயல்பாடுகளில் தெளிவுகள் அதிகரிக்கும். ஆராய்ச்சி செயல்களில் கவனத்துடன் இருக்கவும். சட்டம் சார்ந்த சில நுணுக்கங்களை அறிவீர்கள். வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உருவாக்கும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். தாமதம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

உத்திராடம் : தெளிவுகள் அதிகரிக்கும்.
திருவோணம் : முன்னேற்றமான நாள்.
அவிட்டம் : ஒத்துழைப்புகள் ஏற்படும்.

கும்பம்

சிந்தனை போக்கில் மாற்றம் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடியான சூழல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். பழைய நினைவுகள் மூலம் செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். உயர் கல்வியில் சிறு குழப்பம் தோன்றி மறையும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். சிக்கல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்

அவிட்டம் : மாற்றம் ஏற்படும்.
சதயம் : ஆர்வமின்மை உண்டாகும்.
பூரட்டாதி : புரிதல்கள் அதிகரிக்கும்.

மீனம்

மனதில் புதிய இலக்குகள் உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். வர்த்தகப் பணிகளில் லாபம் உண்டாகும். கடன் சார்ந்த சில உதவிகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெண்மை நிறம்

பூரட்டாதி : இலக்குகள் பிறக்கும்.
உத்திரட்டாதி : லாபம் உண்டாகும்.
ரேவதி : கனவுகள் நிறைவேறும்.

இன்றைய நற் சிந்தனைகள்

விடாமுயற்சி

ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.- Sir Winston Churchill

நான் மெதுவாக நடப்பவன்தான்; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை.
– Abraham Lincoln.

thiruvalluvar

தினம் ஒரு திருக்குறள்

நாள்தோறும் திருக்குறள் படிப்போம், நடப்போம் அதன்படி, நல்லறம் வளர்ப்போம்

அதிகாரம் : படைச்செருக்கு

குறள் 775

விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.

மு.வ உரை:
பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.

இன்றைய சிந்தனைக்கு

”யானெனும் செருக்கு மனிதர்க்குப் பகை”

‘நமக்குத்தான் அனைத்தும் தெரியும்’ என்ற செருக்குதான் மனிதனின் முதல் பகைவன், “எம்மால்தான்” அனைத்துமே இயலும், நான் அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியில்தான் முடியும்…

எந்த மனதில் ‘செருக்கு’ சூழ்ந்திருக்கிறதோ அங்கு சிக்கல்களும் இருக்கும். ’’நான்’’ அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியையே கொடுக்கும்…

மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் தடையாக இருப்பது இந்த ‘’நான்’’ எனும் செருக்குதான்… !

பணியிடமாகட்டும், மாமியார் மருமகள் உறவுகளாகட்டும், கணவன் மனைவிடையே ஆகட்டும், இங்கெல்லாம் உறவுமுறை கெடுவதற்கு இந்த கேடான எண்ணங்களே காரணம்…!

நண்பர்களிடையே பிரிவு நிகழ்வதும் இந்த எண்ணங்களினால்தான்…!

இன்று செயல்படுவோம், நாளை செயல்படுவோமா…? என்று நமக்குத் தெரியாது. இப்படியிருக்க, நமக்கு இந்த செருக்கு மிகத் தேவைதானா…? என்று சற்று ஆலோசிக்க வேண்டும்…!

ஆம் நண்பர்களே…!

‘நான்’, ‘எனது’ என்பது அறியாமை…!
‘நாம்,’ ‘நம்முடையது’ என்பது அறிவுடைமை…!!

?? நாம் வாழ்வில் முழுமையான நிலையினை அடைய விரும்பினால், ‘’நான்’’ எனும் செருக்கினை முழுமையாக அகற்றிவிடுவதே சாலச் சிறந்தது…!??

  • தினசரி.காம்

பஞ்சாங்கம் மார்ச் 5 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்! News First Appeared in Dhinasari Tamil

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.