தமிழ்நாடு ஆளுநரான ஆர்.என்.ரவி மேற்கு வங்க மாநிலத்திற்கு ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி 2021 செப்டம்பர் 18-ஆம் தேதியிலிருந்து இன்று வரை பதவி வகித்து வந்தார். இந்நிலையில் மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் திடீரென பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் ஆளுநர் ரவி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு பதிலாக கேரள ஆளுநரான ராஜேந்திர அர்லேகருக்கு கூடுதல் பொறுப்பாக தமிழக ஆளுநராக பதவி வகிக்கவுள்ளார். இந்த ஆளுநர் மாற்றங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளார்.