விஜய் பட பாடலில் இதுவரை இல்லாத புதுமை … இயக்குனரைப் பாராட்டிய வைரமுத்து!
CineReporters Tamil March 22, 2026 02:48 PM

துள்ளாத மனமும் துள்ளும் படத்தை இயக்கியவர் எழில். பாடலாசிரியர் வைரமுத்து எழுதிய ‘தொடு தொடு எனவே வானவில் என்னை தூரத்தில் அழைக்கின்ற மேகம்…’ என்ற பாடலை எழுத வாய்ப்புக் கொடுத்ததற்காக இயக்குனர் எழிலைப் பாராட்டினார். இந்தப் பாடலுக்காக இதுவரை பயன்படுத்தாத ஒரு சொல்லைப் பயன்படுத்தியுள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து.

இல்லாததை நான் எல்லாம் செஞ்சித் தாரேன் என்ற நிலையில் காதலன் காதலியைப் பார்த்துப் பாடுகிறான். இது காதலில் சாத்தியம். நிஜவாழ்க்கையில் இது முடியாது. இசை அமைத்தவர் எஸ்.ஏ.ராஜ்குமார். படத்தில் அத்தனை பாடல்களும் சூப்பர் தான்.

அதிலும் இந்தப் பாடல் சூப்பர் ரகம். வானில் ஒரு புயல் மழை வந்தால் அழகே எனை எங்ஙனம் காப்பாய்? என்று காதலி கேட்பாள். அதற்கு காதலன், கண்ணே உனை என் கண்ணில் வைத்து இமைகள் என்னும் கதவுகள் அடைப்பேன் என்று காதலன் பதில் தருகிறான். இதெல்லாம் நிஜ வாழ்க்கையில் சாத்தியமாகுமா? இதே கேள்வியைப் பாடலிலும் காதலி கேட்கிறாள். சாத்தியம் ஆகுமா? என்று. அதற்கு காதலன் நான் சத்தியம் செய்யவா என்று பதில் தருகிறான் காதலன்.

இப்படித்தான் பாடல் முழுவதும் அன்பை மிகைப்படுத்த பல விஷயங்களை கவிஞர் எழுதியுள்ளது சிறப்பு. அதிலும் அழகே எனை எங்ஙனம் காப்பாய் என்ற வரியில் ‘எங்ஙனம்’ என்ற வார்த்தையை இதுவரை தமிழ்த்திரை உலகில் எந்த இடத்திலும் பயன்படுத்தவில்லை. இந்த சொல்லை இயக்குனர் எழில் அனுமதித்து இருந்ததற்காக வைரமுத்து அவரைப் பாராட்டியுள்ளார். மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.