முதல்வர் சீட் கிடைக்காது என்று தெரிந்ததும் விஜய் போட்ட மாஸ்டர் ப்ளான்..ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!
ராகேஷ் தாரா March 24, 2026 11:14 PM

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதால் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார். ஆனால் தற்போதை நிலைப்படி தேர்தல் முடிவுகளைப் பொறுத்து விஜய் சினிமாவில் தொடர்ந்து நடிக்கலாமா வேண்டாமா என்கிற முடிவை எடுப்பார் என்று தெரிகிறது. இந்த சட்டமன்ற தேர்தலில் தனது முதல்வர் கனவு நிறைவேறாது என தெரிந்த விஜய்  தேர்தலுக்குப் பின் விஜய் மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்திருப்பதாக இதன் பின் அவர் ஒரு பக்கா திட்டம் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது 

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பெரும் பரபரப்போடு இயங்கி வருகின்றன. ஒரு பக்கம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் பறக்கும் படையில் மாவட்டங்கள் முழுவதும் கடும் சோதனை நடத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் இந்த தேர்தல் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. காரணம் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. இதன் தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் முதல்வர் வேட்பாளருக்கு போட்டியிடுகிறார். 

விஜயின் முதல்வர் கனவு சாத்தியமா?

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருந்த விஜய் அரசியல் களத்திற்கு வந்துள்ளதால் அவருக்கு மக்களிடையே பெரியளவில் வரவேற்பு இருந்து வருகிறது. மாவட்டங்கள் முழுவதும் அவரது அரசியல் பரப்புரைகளில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு விஜய்க்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளார்கள். ஆனால் இந்த வரவேற்பு எல்லாம் வாக்குகளாக மாறுமா என்பது தான் அனைவரது கேள்வியாகவும் உள்ளது. அரசியலுக்குள் நுழைவதற்கு முன்பே விஜய் பொதுவாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார். கரூர் விபத்து முதல் சங்கீதாவுடனான விவாகரத்து போன்ற பிரச்சனைகள் அவரது வாக்கு எண்ணிக்கையை பாதிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எப்படி இருந்தாலும் இந்த தேர்தலில் விஜய் 8 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற வாய்ப்புள்ளதாகவும் முதல்வராவது சாத்தியம் இல்லை என்பதே அனைவரது கருத்தாகவும் இருக்கிறது. 

மீண்டும் சினிமாவிற்கு திரும்பும் விஜய் 

தனது முதல்வர் கனவு இந்த சட்டமன்ற தேர்தலில் நிறைவேறாது என்பதை விஜயுன் உணர்ந்து தான் இருப்பார். இதனால் அடுத்த தேர்தல் வரைக்குமான திட்டங்களை அவர் இப்போதே ப்ளான் செய்துவிட்டார். தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி தேர்தல் முடிந்தபின்னர். விஜய் ஆண்டுக்கு இரண்டு படங்கள் நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. தனது ரசிகரகள் பலர் அடுத்த தேர்தல் வரை வாக்களிக்கும் வயதை எட்டிவிடுவார்கள் இதனால் இந்த தேர்தலைக் காட்டிலும் 2031 ஆம் தேர்தலில் தனது வெற்றிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக விஜய் கருதுகிறார். அந்த வகையில் தேர்தல் முடிந்ததும் அவர் அட்லீ இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டு வருவதாக தெரியவந்துள்ளது. முன்னதாக இந்த கூட்டணியில் வெளியான தெறி , மெர்சல் , பிகில் ஆகிய படங்கள் மாபெரும் வசூல் வெற்றிபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பவன் கல்யாண் போன்ற நடிகர்கள் அரசியலுக்குள் இயங்கிக்கொண்டே படங்களிலும் நடித்து வருவது போல் விஜயும் ஆண்டுக்கு இரு படங்களில் மட்டும் நடிக்க இருக்கிறார். 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.