நடிகை ராதிகா சரத்குமார் தமிழ் திரையுலகில் தனது பயணத்தின் 49வது ஆண்டில் கால் பதித்துள்ளதை முன்னிட்டு, ‘ஹாய்’ படக்குழுவினர் சிறப்பு கொண்டாட்டம் நடத்தினர். கேக் வெட்டி, ஆளுயர மாலை அணிவித்து அவரை மரியாதையுடன் கௌரவித்தனர்.
மேலும், பாரதிராஜா இயக்கிய ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ராதிகா, ‘நிறம் மாறாத பூக்கள்’, ‘இன்று போய் நாளை வா’, ‘மூன்று முகம்’, ‘நல்லவனுக்கு நல்லவன்’, ‘சிப்பிக்குள் முத்து’ உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துத் தனக்கென தனித்துவமான இடத்தைப் பெற்றார்.

தமிழ் மட்டுமல்லாமல், இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிப்படங்களிலும் தனது திறமையை வெளிப்படுத்திய அவர், சின்னத்திரையிலும் பெரிய தடம் பதித்துள்ளார்.
அண்மையில் ‘தாய் கிழவி’ படத்தில் 70 வயது முதியவளாக நடித்த அவர், மீண்டும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.இந்நிலையில், கவின் மற்றும் நயன்தாரா நடிக்கும் ‘ஹாய்’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற இந்த கொண்டாட்டம், ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது.
இந்தப் படத்தை விஷ்ணு எடவன் இயக்கி வருகிறார். அதனைச் சுற்றியுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.