தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆர்.கே. நகர் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை மிகக்கடுமையாகச் சாடினார். கடந்த ஐந்து கால திமுக ஆட்சியில் தமிழக மக்கள் எவ்வித நன்மைகளையும் பெறவில்லை என்றும், இந்த அரசு வெறும் ‘கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன்’ ஆகிய மூன்றை மட்டுமே கொள்கையாகக் கொண்டு செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இது குறிப்பாக, கழிப்பறை கட்டண வசூலில் கூட முறைகேடுகள் நடப்பதாகக் குறிப்பிட்ட அவர், திமுக ஆட்சியில் ஊழல் என்பது அடிமட்டம் வரை ஊடுருவி இருப்பதாகவும், பொதுமக்களின் வரிப்பணம் திட்டமிட்டுச் சுரண்டப்படுவதாகவும் தனது உரையில் ஆவேசமாகத் தெரிவித்தார்.
மேலும், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் போன்ற மக்கள் நலத்திட்டங்களைச் சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு வாரிசு அரசியலிலும் குடும்ப ஆட்சியிலுமே கவனம் செலுத்துவதாக விமர்சித்தார்.
இதனால் “ஊழலுக்காகக் கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக தான்” என்று சாடிய அவர், தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் மட்டுமே முடங்கிக் கிடக்கும் வளர்ச்சித் திட்டங்கள் புத்துயிர் பெறும் என்றும், ஆர்.கே. நகர் உள்ளிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் மக்கள் நலப்பணிகள் முழுவீச்சில் தொடரும் என்றும் உறுதி அளித்தார். திமுகவின் ஊழல் நிறைந்த ஆட்சிக்கு மக்கள் இந்தத் தேர்தலில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அவரது பிரசாரத்தின் முக்கிய கருத்தாக அமைந்தது.