“31 தொகுதி… வெறும் 33,000 ஓட்டுதானா?” கிருஷ்ணசாமியை 'ரோஸ்ட்' செய்த எடப்பாடி…. அதிமுக கூட்டணியில் என்ன நடக்குது….?
SeithiSolai Tamil March 29, 2026 07:48 PM

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அதிமுக மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்கு, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செம ‘ஷார்ப்’பாக பதிலடி கொடுத்துள்ளார். கிருஷ்ணசாமி எங்களிடம் நேரடியாகப் பேசவில்லை; ஒரு நபர் மூலமாக முதலில் 10 சீட் கேட்டார், பிறகு 5 சீட் கேட்டார், ஆனால் எங்களால் அது முடியாது எனத் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டோம் என இபிஎஸ் போட்டு உடைத்துள்ளார்.

“வாக்குகளோட அடிப்படையிலதான் சீட் கொடுக்க முடியும் பாஸ்… சும்மா கேட்டா எப்படிக் கொடுக்க முடியும்?” என எடப்பாடி தரப்பு கறாராகப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் அனலைப் பரப்பியுள்ளது. தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, கடந்த காலத் தேர்தல் கணக்குகளைச் சுட்டிக்காட்டி கிருஷ்ணசாமியை அதிர வைத்துள்ளார். “31 தொகுதியில போட்டியிட்டு வெறும் 33,000 வாக்குகள்தான் வாங்கியிருக்காரு… இத வச்சுட்டு இவ்வளவு சீட் கேட்டா எப்படி?” என அவர் கேட்ட கேள்வி, புதிய தமிழகம் கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள், “அதிமுக-வோட இந்த ‘டேட்டா’ பாலிடிக்ஸ் கிருஷ்ணசாமியை ரொம்பவே அப்செட் ஆக்கிருமே!” எனச் சமூக வலைதளங்களில் கமெண்டுகளைத் தட்டி வருகின்றனர். கூட்டணிப் பேச்சுவார்த்தையில் நீடிக்கும் இந்த ‘சீட்’ மோதல், தென் மாவட்ட அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.