தவெக தலைவர் விஜய் எப்போது கரூருக்கு சென்று அங்கே கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தார்களோ அப்போது முதலே விஜய் செய்யும் பிரச்சாரம் மக்கள் சந்திப்பு கூட்டம், பொதுக்கூட்டம் என எதுவாக இருந்தாலும் பல நிபந்தனைகளை தமிழக காவல்துறை விதித்து வருகிறது.
ஏனெனில், ஒவ்வொரு முறையும் அங்கு உயிரிழப்புகள் ஏற்படுகிறது.. இவ்வளவு பேர்தான் கலந்து கொள்ள வேண்டும்.. இந்த வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகளை போலீசார் விதிக்கிறார்கள்.. ஆனால் இது ஆளுங்கட்சியான திமுகவின் சதி.. மக்களை சந்திக்கவிடாமல் என்னை தடுக்கிறார்கள்.. என புகார் சொல்லி வருகிறார் விஜய்.
நேற்று கூட விஜய் பெரம்பூரில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு கொளத்தூர் சென்ற போது அங்கே அவரை காண அனுமதி பெற்றதை விட அதிக மக்கள் கூடியிருந்தனர்.. எனவே இரண்டு நிமிடங்கள் மட்டும் பேசிவிட்டு விஜய் அங்கிருந்து சென்றுவிட்டார். அதோடு வில்லிவாக்கம் மற்றும் அண்ணா நகர் தொகுதியில் விஜய் பிரச்சாரம் செய்யவில்ல. ஒரு பக்கம் விஜய் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது..
இந்நிலையில்தான், வருகிற ஏப்ரல் 2ம் தேதி திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் பிரச்சாரம் செய்யவுள்ளர். நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை விஜய் பிரச்சாரம் செய்து கொள்ளலாம் என போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.. அதேநேரம் ரோட் ஷோ நடத்தக்கூடாது என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளையும் போலீசார் விதித்துள்ளனர்..