அணு ஆயுதம் வைத்திருப்பதாக சொல்லி ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடங்கிய போர் ஒரு மாதத்தை தாண்டி விட்டது. ஈரான் மற்றும் இஸ்ரேலில் பல கட்டிங்கள் கடுமையான சேதமடைந்துள்ளது. ஆனாலும் போர் நின்ற பாடில்லை., ஒருபக்கம் அமெரிக்காவுக்கு உதவும் வளைகுடா நாடுகளான துபாய், சவுதி அரேபியா, பஹ்ரைன், அபுதபி உள்ளிட்ட வளைகுடா நாடுகளை குறிவைத்து ஈரான் தொடர்ந்து ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கும் சேதங்கள் ஏற்பட்டிருக்கிறது.. குறிப்பாக பல எண்ணெய் கிணறுகள் பாதிக்கப்பட்டிருக்கிறது..
இதன் காரணமாக வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் செல்லவில்லை. ஒருபக்கம் கச்சா எண்ணெய் கொண்டு வரும் கப்பல்களை ஈரான் தனது ஹோர்மூஸ் நீரிணை அருகே தடுத்து நிறுத்தி விடுகிறது அல்லது தாக்குகிறது.
இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது.. இதனால் ஹோட்டல்களுக்கு பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டர் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக பல ஹோட்டல்களும் மூடப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஒருபக்கம் ஈரானை அழுத்தி விட்டோம்.. இறந்துபோனவர்கள் எல்லாமே பயங்கரவ்வாதிகள்.. இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் போர் முடிவுக்கு வரும் என ஈரானை ஜெயித்து விட்டது போல அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து சொல்லி வருகிறார். இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஈரான் ராணுவம் ‘ஈரானின் ராணுவத்திறனை முழுமையாக மதிப்பிட தவறிய அமெரிக்காவும் இஸ்ரேலும் பேரழிவுகரமான தாக்குதல்களை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும்.. அமெரிக்கா அவமானப்பட்டு இழிவடைந்து நிரந்தரமான வருத்தத்திற்கு ஆளாகி சரணடையும் வரை இந்த போர் தொடரும்’ என தெரிவித்திருக்கிறது.