புதுச்சேரி மாநிலத்தில் வருகிற ஏப்ரல் 9-ஆம் தேதி ( வியாழக்கிழமை) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சியான நேயம் மக்கள் கட்சி ஆகியவை சார்பில் 30 தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்களை ஆதரித்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று சனிக்கிழமை ( ஏப்ரல் 4 ) புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, புதுச்சேரியில் ஆளும் என். ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணியை கடுமையாக விமர்சித்திருந்தார். இதே போல, காங்கிரஸ்- திமுக கூட்டணியையும் விமர்சித்து பேசி இருந்தார். மேலும், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக போட்டியிட உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களுக்கு வாக்குகள் அளித்து வெற்றி பெற வைக்க வேண்டும் எனவும், ஆட்சி அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.
மேலும் படிக்க: 4ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டா சசிகலா.. 2 தொகுதிகளில் வேட்பாளர்கள் மாற்றம்..
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகள்இதைத் தொடர்ந்து, புதுச்சேரி மாநில மக்களுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளை விஜய் அறிவித்திருந்தார். அதில்,
இந்த தேர்தலில், பிரதான கட்சிகளான திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒரு கூட்டணியாகவும், என். ஆர். காங்கிரஸ், பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மற்றொரு கூட்டணியாகவும் தேர்தலை சந்திக்க உள்ளன. இதே போல, தமிழக வெற்றி கழகம் 30 தொகுதிகளிலும் தனித்து களம் காண்பதற்காக வேட்பாளர்களை அறிவித்தது. இதனிடையே, உருளையன்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் நேரு என்ற குப்புசாமி தனது நேயம் மக்கள் கட்சியை தவெகவுடன் கூட்டணிக்காக இணைத்தார். அதன்படி, உருளையன்பேட்டை மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய இரு தொகுதிகள் நேயம் மக்கள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில், 28 சட்டமன்ற தொகுதிகளில் தமிழக வெற்றி கழகமும், 2 தொகுதிகளில் நேயம் மக்கள் கட்சியும் போட்டியிட உள்ளன.
மேலும் படிக்க: தேர்தலில் போட்டியிடாதது ஏன்.. மே 4ஆம் தேதி பின் தெரிவிக்கிறேன்- அண்ணாமலை பகீர் பேட்டி..