அதிமுகவுக்கு எதிரான ஆதாரத்தை வெளியிட்ட தேமுதிக…! “வயிறு எரியும் Smell தமிழ்நாடு முழுவதும் வீசுது”… இபிஎஸ் ICU-வுக்கு போகாம இருந்தா சரிதான். . பிரேமலதா விஜயகாந்த் பரபர..!
SeithiSolai Tamil April 05, 2026 04:48 PM

தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது இன்று கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலின் போது போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினர் பதவி தருவதாகக் கூறிவிட்டு, தற்போது அதிமுக தலைமை அதை மறுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “கடந்த 2024-ஆம் ஆண்டு அதிமுக – தேமுதிக கூட்டணி அமைக்கப்பட்ட போது, தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படுவதாக முறைப்படி ஒப்பந்தம் கையெழுத்தானது. 2025-இல் இந்த இடத்தை வழங்குவதாக எடப்பாடி பழனிசாமி உறுதியளித்திருந்தார். ஆனால், தற்போது அப்படி ஒரு வாக்குறுதியைத் தரவே இல்லை என அவர் பொய் பேசி வருகிறார். இதோ அதற்கான ஆதாரப்பூர்வமான ஒப்பந்த நகல் என்று கூறி ஒப்பந்த கடிதத்தை ஊடகங்களிடம் காண்பித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “தேமுதிகவை அரை சதவீத (0.5%) வாக்குகள் மட்டுமே கொண்ட கட்சி என எடப்பாடி பழனிசாமி விமர்சிப்பது அரசியல் நாகரிகம் கிடையாது. எங்களைச் சிறுமைப்படுத்திப் பேசும் அவர், வரும் மே 4-ஆம் தேதிக்குப் பிறகு தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) செல்லும் நிலைக்குத் தள்ளப்படுவார்,” என ஆவேசமாகத் தெரிவித்தார். அதோடு நாங்கள் திமுக கூட்டணியில் நீங்கதான் உங்களுக்கு ஏன் கருகுது. எடப்பாடி பழனிச்சாமியின் வயிறு எரிந்து கருகும் ஸ்மெல் தமிழ்நாடு முழுவதும் வீசுகிறது என்றார். மேலும்
கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டு, தற்போது எடப்பாடி பழனிசாமி பின்வாங்குவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.