“நீங்கதான் இந்த வீட்டு லட்சுமி!”.. மாமனார் சொன்ன வார்த்தை.. ஆனந்தக் கண்ணீரில் உக்ரைன் மருமகள்.. வியக்க வைத்த இந்தியப் கலாச்சாரம்..!!
SeithiSolai Tamil April 09, 2026 02:48 PM

இந்தியக் கலாச்சாரத்தில் பெண் குழந்தைகள் மற்றும் மருமகள்களை ‘லட்சுமி’ தேவியின் அவதாரமாக மதிக்கும் உயரிய பண்பு, ஒரு வெளிநாட்டு மருமகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சாண்ட்ரா என்ற பெண், இந்தியர் ஒருவரைத் திருமணம் செய்துள்ளார். ஒருநாள் அவர் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அவரது மாமனார் அவரிடம் வந்து சிறிது பணத்தைக் கொடுத்து ஆசி வழங்கினார்.

எதற்காக இந்தப் பணம் என்று சாண்ட்ரா வியப்புடன் கேட்டபோது, “நீ இந்த வீட்டின் லட்சுமி, நீ மகிழ்ச்சியாக இருந்தால்தான் இந்த வீடு செழிப்பாக இருக்கும்” என்று மாமனார் கூறியது அவரை நெகிழச் செய்தது.தனது மாமனார் காட்டிய இந்த அன்பையும், இந்தியப் பாரம்பரியத்தையும் கண்டு வியந்த சாண்ட்ரா, இது குறித்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

View this post on Instagram

A post shared by Sandra On (@dra.sandraa)