விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நாளை வெளியாக உள்ள எல்.ஐ.கே திரைப்படம் வெற்றி பெற வேண்டி, விக்னேஷ் சிவன் தனது மனைவி நயன்தாராவுடன் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அந்த பக்தி தருணங்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
நடிகை நயன்தாரா தயாரிப்பில் உருவாகியுள்ள எல்.ஐ.கே திரைப்படம் பல தடைகளைத் தாண்டி தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கிய இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான், யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும், அனிருத் இசையமைத்த இந்த படத்தின் “தீமா”, “எனக்கேன் யாருமில்லை” போன்ற பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. அதனைத் தொடர்ந்து “வைப் வாசி” என்ற புதிய பாடலும் இன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
சமீபத்தில் நடைபெற்ற பட விழாவில், விக்னேஷ் சிவன் “நானும் ரவுடிதான்” படப்பிடிப்பின் போது நயன்தாராவுடன் ஏற்பட்ட தனது காதல் கதையை மனம் திறந்து பகிர்ந்தார். மேலும், “நான் நயன்தாராவின் கணவர் என்று அனைவராலும் அறியப்படுவது எனக்கு மிகுந்த பெருமை. வாழ்க்கையில் அன்பே மிக முக்கியம்” என அவர் உணர்ச்சிபூர்வமாக தெரிவித்தார்.
இந்நிலையில், நயன்தாரா தனது படப்பிடிப்பு மற்றும் தொழில் தொடர்பான பணிகளில் பிஸியாக இருந்தபோதிலும், தனது கணவருக்காக எல்.ஐ.கே படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது முழு ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளார்.