“தேர்தல் ஆணையம் பாஜக-வோட பி-டீமா?” ரூ.10,000 தர்றோம்னு மோசடி…. ஆர்.எஸ்.பாரதி கொடுத்த அதிரடி புகார்….!!
SeithiSolai Tamil April 17, 2026 06:48 PM

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுக செய்தித் தொடர்பாளர் ஆர்.எஸ்.பாரதி, பாஜகவினர் வீடு வீடாகச் சென்று ரூ.10,000 மதிப்பிலான போலி காசோலைகளை வழங்கி வருவதாகப் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதன் மூலம் வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளிட்ட முக்கியத் தனிநபர் தகவல்களை அவர்கள் திருடுவதாகவும், இது மிகப்பெரிய தேர்தல் முறைகேடு என்றும் அவர் சாடினார். “பாஜகவின் இந்தத் தில்லுமுல்லு குறித்து புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் மௌனம் காப்பது ஏன்?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படாமல் பாஜகவின் ‘பி-டீம்’ போலச் செயல்படுவதாக மிகக் கடுமையாக விமர்சித்தார். வாக்காளர்களை ஏமாற்றும் இந்த மோசடி வலையில் மக்கள் சிக்க வேண்டாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆர்.எஸ்.பாரதியின் இந்த அதிரடிப் புகார் இப்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் அனலைக் கிளப்பியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.