Breaking: எடப்பாடியில் மட்டும் விசில் சின்னத்தை முடக்குவதா..? “இனி TVK 234 தொகுதிகளிலும் களமிறங்கும்”… சுயேட்சை வேட்பாளருக்கு திடீர் ஆதரவு… விஜய் அதிரடி..!!!
SeithiSolai Tamil April 19, 2026 01:48 PM

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய வெளியிட்டுள்ள அறிக்கையில், என் நெஞ்சில் குடியிருக்கும் சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதி மக்கள் அனைவருக்கும் வணக்கம். எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் திரு. கூ. பிரேம்குமார் அவர்கள், முன்பே நமது ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாகப் பயணித்தவர்தான். நம்முடைய சகோதரர்தான். எனவே, தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் நமது முன்னாள் நிர்வாகியான திரு. கூ. பிரேம்குமார் அவர்களையும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தையும் நமது தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஒருமனதாக ஆதரிக்க முடிவு செய்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

நமது முழு ஆதரவுடன் களம் காணும் நம் சகோதரர் திரு கூ. பிரேம்குமார் அவர்களை, மனத்தளவில் நம்முடைய வேட்பாளராகக் கருதி, அவருக்குத் தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்பட்டுள்ள வரிசை எண் 12-இல் தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன். நம்குடும்பத்தைச் சேர்ந்த அவரைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கழக நிர்வாகிகளையும் தோழர்களையும் எடப்பாடி தொகுதி மக்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னத்தை முடக்கி, குறுக்கு வழியில் வெற்றியடைய முயன்றவர்களுக்குச் சரியான பாடத்தைப் புகட்டும் விதத்தில் இவரது வெற்றி அமையட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் முன்னதாக எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் கடைசி நேரத்தில் மாயமானதால் அந்த ஒரு தொகுதியில் மட்டும் தமிழக வெற்றி கழகத்தால் போட்டியிட முடியாமல் போனது. அவரை கருப்பு ஆடு என்று ஆதவ் அர்ஜுனா விமர்சித்திறந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் 233 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில் தற்போது 234 தொகுதிகளிலும் போட்டியிடும் விதமாக விஜய் சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.