திருச்சூர் பட்டாசு கிடங்கில் பயங்கர தீ விபத்து: 12 பேர் உயிரிழப்பு!
Seithipunal Tamil April 22, 2026 02:48 AM

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள முண்டத்திக்கோடு பகுதியில் செயல்பட்டு வந்த வாணவேடிக்கை வெடிபொருள் சேமிப்புக் கிடங்கில் இன்று ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், 12 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் உறுதி செய்துள்ளன. இந்தச் சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முண்டத்திக்கோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பட்டாசுக் கிடங்கில் இன்று மதிய வேளையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. வெடிபொருட்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறியதால், அந்தப் பகுதியே போர்க்களம் போலக் காட்சியளித்தது. வெடிச் சத்தத்தின் தாக்கம் பல கிலோமீட்டர் தூரத்திற்கு உணரப்பட்டதாகவும், அருகில் இருந்த சில வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். தீ விபத்து ஏற்பட்டபோது கிடங்கிற்குள் ஏராளமான தொழிலாளர்கள் பணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

View this post on Instagram

A post shared by 𝗔𝗺𝗯𝘂𝗿 𝗘𝘅𝗽𝗿𝗲𝘀𝘀 (@amburexpress)