உடல்வலி ,காய்ச்சலுக்கு எடுக்கும் மாத்திரையால் உண்டாகும் விளைவுகள்
Top Tamil News April 23, 2026 07:48 AM

பொதுவாக சிலர் லேசாக தா;தலை வலி வந்ததுமே உடனே பாராசிட்டமால் மாத்திரையை போட்டு கொள்வதுன்டு .இன்னும் சிலர் உடல்வலி ,காய்ச்சல் லேசாக இருந்தாலே அந்த மாத்திரையை எடுத்து கொள்வதுண்டு ,அதனால் இந்த மாத்திரை பயன் பாட்டால் நமக்கு எதிர்காலத்தில் என்னென்ன பாதிப்பு வரும் என்று இந்த பதிவில் பார்க்கலாம் :
1.சிலர் அதிக அளவு பாராசிட்டமால் உட்கொள்வர் .இப்படி உட்கொள்வது  கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும்,
2. சில நபர்களுக்கு பாராசிட்டமால் ஒவ்வாமை இருக்கலாம் . இதன் விளைவாக அந்த நபருக்கு தோல் வெடிப்பு, அரிப்பு, வீக்கம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தோன்றும். .
3.சிலருக்கு பாராசிட்டமாலின்  அதிகப்படியான பயன்பாடு சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தலாம், 
4.மேலும் சிலருக்கு பாராசிட்டமால் வயிறு மற்றும் குடலின் உட்பகுதியை எரிச்சலடையச் செய்யும் , 
5.மேலும் சிலருக்கு இந்த பாராசிட்டமால் மாத்திரையால் வயிற்றுப் புண்கள், இரைப்பை குடல் இரத்தப்போக்கு மற்றும் பிற செரிமான பிரச்சனைகள் உண்டாகும்  
6.சிலரின் வயிற்றில் புண்கள் அல்லது இரைப்பை குடல் இரத்தப்போக்கு இருக்கும் .இந்த வரலாறு உள்ள நபர்கள் பாராசிட்டமாலை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்.
7.அதிக அளவு பாராசிட்டமால் எடுத்துக்கொள்வது மிகவும் ஆபத்தானது .. 
8.இந்த மாத்திரையால்  உடனடி அறிகுறிகளைக் காட்டாது, ஆனால் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் உயிருக்கு ஆபத்தானது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.