தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், தவெக ஆட்சியை கைப்பற்றியது. அந்த வகையில் தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் ஒருவர் ஒரு தொகுதியில் தான் எம்எல்ஏ பதவியை வகிக்க முடியும். அந்த வகையில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏ பதவியை முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்துள்ளார். எனவே இந்த தொகுதியில் இன்னும் 6 மாத காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும்.