இன்னைக்கு இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க…. CM விஜய் வருகையால் ட்ரோன்களுக்கு தடை…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!
SeithiSolai Tamil June 01, 2026 12:48 PM

தமிழக முதல்வர் விஜய் அவர்களின் திருச்சி வருகையையொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக திருச்சியில் இன்று (ஜூன் 1) ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடுவதற்கு மாவட்ட நிர்வாகம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது. இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் தயாள் விடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கையில், முதல்வரின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அனுமதியின்றி வான்வெளியில் ட்ரோன்களைப் பறக்கவிடுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

​இந்தத் தடையை மீறி யாராவது இன்று திருச்சியில் ட்ரோன்களையோ அல்லது ஆளில்லா வான்வழி வாகனங்களையோ பறக்கவிட்டால், அவர்கள் மீது காவல்துறை மூலம் மிகக் கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை பாயும் என்றும் ஆட்சியர் எச்சரித்துள்ளார். முதல்வரின் வருகையால் திருச்சியில் பாதுகாப்பு வளையம் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த ட்ரோன் தடை உத்தரவு அரசியல் வட்டாரத்திலும், உள்ளூர் பகுதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.