மான் ஒன்றைச் சிறுத்தை வேட்டையாடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி, பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. சாதாரணமாக விலங்குகளின் வேட்டை வீடியோக்கள் என்றாலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
ஆனால், இந்த வீடியோவில் உள்ள ட்விஸ்ட் தான் ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் வாயடைத்துப் போகச் செய்துள்ளது. பசியோடு இருக்கும் சிறுத்தை, தன் இரையைக் குறிவைத்து மின்னல் வேகத்தில் பாய்ந்து மானைப் பிடிக்கும் அந்த நொடி வரை அனைத்தும் வழக்கமான வேட்டையைப் போலவே நகர்கிறது.
“>
ஆனால், வீடியோவின் இறுதிப் பகுதியில் யாரும் எதிர்பாராத ஒரு திருப்புமுனை ஏற்படுகிறது. சிறுத்தையின் பிடியில் சிக்கிய மான், தன் சாதுரியத்தாலோ அல்லது சிறுத்தையின் சிறு கவனச்சிதறலாலோ நொடிப் பொழுதில் அதன் பிடியில் இருந்து தப்பித்து உயிர் பிழைத்து ஓடுகிறது.
இந்நிலையில் “கழுத்துவரை வந்த மான் எப்படி தப்பியது?” என்று சிறுத்தை ஏமாற்றத்துடன் பார்க்கும் அந்த இறுதி நொடி, பார்ப்பவர்களை வியப்பின் உச்சத்துக்கே கொண்டு சென்றுள்ளது. இயற்கையின் விதிகளையும் தாண்டி, இறுதிவரை போராடினால் எதிலிருந்தும் தப்பிக்கலாம் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சிறந்த உதாரணமாக மாறியுள்ளது.