“ஆளுநர் ஸ்பீச் சூப்பர்தான்…. ஆனா தவெக அரசு இதையும் செய்யணும்” மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வைத்த முக்கிய டிமாண்ட்….!!
SeithiSolai Tamil June 18, 2026 08:48 PM

தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் அர்லேகர் நிகழ்த்திய உரைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தனது பலத்த வரவேற்பைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஒன்றிய அரசின் நிதிப் பகிர்வை முறையாகப் பெறுவதற்காக, சட்ட வல்லுநர்கள் அடங்கிய புதிய குழு ஒன்று அமைக்கப்படும் என்று ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ள அறிவிப்பை அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார். மேலும், போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு மற்றும் சிறந்த நிர்வாகம் உள்ளிட்ட கொள்கை ரீதியான அறிவிப்புகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆதரவை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

​அதே நேரத்தில், தமிழகத்தில் தற்போது நிலவி வரும் பல்வேறு நிர்வாகப் பிரச்சினைகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் மீது, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு உரிய கவனம் செலுத்தி, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நம்புவதாகவும் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். புதிய அரசின் திட்டங்களுக்கும், ஆளுநரின் நேர்மறையான உரைக்கும் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ள இந்த வரவேற்பு, தமிழக அரசியல் களத்தில் ஒரு சுமுகமான மற்றும் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.