ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷின் மருத்துவப் பதிவு ரத்து..!
Newstm Tamil September 20, 2024 10:48 AM

கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் கைது செய்யப்பட்டார். முன்னதாகவே அவர் தனது கல்லூரி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து சந்தீப் கோஷிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டு விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்துள்ளது. சிபிஐ தாக்கல் செய்துள்ள அறிக்கையில், 'பெண் மருத்துவர் கொலையில் சந்தீப் கோஷ் பல்வேறு விஷயங்களை மறைத்துள்ளது தெரிய வந்துள்ளது. கொலையை தற்கொலையாக மாற்ற முயற்சிகள் நடந்துள்ளன' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சந்தீப் கோஷின் மருத்துவப் பயிற்சி பதிவை ரத்து செய்து மேற்கு வங்க மருத்துவ கவுன்சில் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நேற்று (செப். 19) முதல் இது நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தீப் கோஷ் மருத்துவப் பணி செய்ய முடியாது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.