வெந்தயத்தையும் பச்சை பயறையும் அரைத்து தலையில் தடவினால் நேரும் மேஜிக்
Top Tamil News September 20, 2024 04:48 PM

பொதுவாக  முடி உதிர்தல் இள வயதிலேயே பலருக்கு வந்து விடுகிறது .இந்த முடி உதிர் பிரச்சினைக்கு பலர் கண்ட கெமிக்கல் யூஸ் பண்ணி உடலை கெடுத்து கொள்கின்றனர் .இதற்கு ஒரு இயற்கையான முறையில் என்ன செய்யலாம் என்பது பற்றி நாம் இப்பதிவில் காணலாம்  

1.முதலில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தையும்   பச்சை பயறையும்  எடுத்துக் கொள்ளுங்கள். 2.இரண்டையும்  ஒரு நாள் முழுவதும் ஊறிய பின்பு  உலர்ந்த காட்டன் துணியில் மூட்டை போல கட்டி எடுத்து  கொள்ளுங்கள்.
3.அந்த மூட்டையில் அவை நன்கு முளைவிட்ட பிறகு அதை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து,இதனுடன் நான்கு சின்ன வெங்காயத்தை தோலுரித்து சேருங்கள்.
4..பின்னர்  மிக்ஸியை அவற்றை இயக்கி நைசாக அரைத்து எடுத்த பின்பு, அதை தலை முழுவதும் வேரிலிருந்து நுனி வரை நன்கு தடவி ஊற விட்டு விடுங்கள்.
5.அதன் பிறகு அலசினால் நுரைக்க ஆரம்பிக்கும்.


6.அந்த நுரையே உங்களுக்கு ஷாம்பூ போல செயல்படும்.
7.பிறகு தண்ணீர் ஊற்றி தலையை நன்கு அலசி வந்து விடுங்கள்.
8.இது போல  செய்தால் உங்களுடைய முடி வளர்ச்சி அபரிமிதமாக நிச்சயம் இருக்கும்,

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.