பாலிவுட் நடிகைகள் தங்களின் சம்பளத்தை திடீரென உயர்த்துவது சிலருக்கு சாதாரணமாகி விட்டது. இதில் குறிப்பாக, திரிப்தி டிம்ரிதான் 10 மாதங்களில் ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.10 கோடியாக தனது சம்பளத்தை உயர்த்திய நடிகையாக மாறியுள்ளார். ‘அனிமல்’ படத்தில் நடித்து தன்னுடைய திறமையை வெளிப்படுத்திய திரிப்தி, அடுத்தடுத்து பல வெற்றிகரமான படங்களில் நடித்ததன் மூலம் இந்த உயர்வை அடைந்துள்ளார்.
திரிப்தி, 2017-ல் ‘மாம்’ என்ற திரில்லர் படம் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். தொடர்ந்து, ‘லைலா மஜ்னு’ எனும் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். கடந்த ஆண்டு ‘அனிமல்’ படம் மூலம் மிகுந்த புகழ் பெற்ற திரிப்தி, அப்போது ரூ.40 லட்சம் சம்பளம் பெற்றார். பிறகு ‘பேட் நியூஸ்’ படத்தில் நடித்தபோது, அவரது சம்பளம் ரூ.80 லட்சமாக உயர்ந்தது.
இப்போது, திரிப்தி தன்னுடைய கட்டணத்தை ரூ.10 கோடியாக உயர்த்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது அவரது திரைப்படங்களின் வெற்றி மற்றும் எதிர்கால வாய்ப்புகளை கருத்தில் கொண்டு எடுத்த முடிவாகும். தற்போது, ராஜ்குமார் ராவுடன் ‘விக்கி யா கா வோ வாலா வீடியோ’ என்ற புதிய படத்தில் நடிக்கவுள்ளார், இது வரும் மாதம் 11-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.