” ஒரே நாடு ஒரே நாடு தேர்தல் எவ்வளவு ஆபத்தானது.!” அது தவறு என்பது உலகு அரசியலுக்கு தெரியும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு தமிழன் பிரதமராக முடியுமா எனவும் அதற்கு தயாராக வேண்டும் எனவும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
சென்னையில் இன்று மக்கள் நீதி மய்யத்தில் 2வது பொதுக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கமல்ஹாசன் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் பேசுகையில், “ வீரமும் நேர்மையும் இருக்கிறதா என்று என்னையே கேட்டுக் கொண்டவன் நான், தோல்வி என்பது நிரந்தரமானது இல்லை, பிரதமர் பதவியும் நிரந்தரமானதும் இல்லை,
ஒரு தமிழன் பிரதமராக முடியுமா எனவும் அதற்கு நாம் தயாராக வேண்டும்.