செம ஷாக்….! ஆயுத முனையில் மத்திய அமைச்சரின் உதவியாளர் கடத்தல்…. மணிப்பூரில் பரபரப்பு…!!!
SeithiSolai Tamil September 21, 2024 05:48 PM

மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்த புதிய சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சரின் உதவியாளர் சாரங்தெம் சோமோரென்ட்ரோ ஆயுதம் ஏந்திய நபரால் கடத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று காலை 7.48 மணிக்கு நடந்ததாக தெரிகிறது. மேலும் இதனை அங்கிருந்த ஒரு பெண் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த கடத்தல் 2023-ஆம் ஆண்டு மே மாதத்தில் மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி சமூகத்தினர் இடையே ஏற்பட்ட கலவரத்துக்குப் பின்னர் தொடர்ந்து நிலவி வரும் மோதலின் விளைவாக கருதப்படுகிறது. கலவரத்தின் போது 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பல ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கலவரம் முடிந்த பின்னரும் அங்கு ஆங்காங்கே வன்முறைகள் நடைபெற்று வருவதால், நிலைமை சீராகவில்லை. கடத்தலுக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க துரிதமாக செயல்பட்டு வருவதாக மாநிலத்தின் பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் கூறியுள்ளார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.