“தமிழக வெற்றி கழகம் மாநாட்டுக்கு நா.த.க தொண்டர்கள் வந்து விடுவாங்க”-நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்..!!
SeithiSolai Tamil October 18, 2024 08:48 PM

விக்கிரவாண்டியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது, தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டுக்கு எங்க யாரையும் அழைக்க கூடாது. கட்சி தொடங்கும் போது அவரே தனது தொண்டர்களுக்கு தோழர்களுக்கு என்ன சொல்லணும் நினைக்கிறாரோ அவர்தான் சொல்லணும். நான் போய் என்ன பேச முடியும்? அதுக்கு ஒரு நேரம் வரணும். அது தேவையற்றது.

என்னை மாநாட்டுக்கு அழைக்கிறார் என்றால் என்னுடைய கட்சி தொண்டர்கள் என்னுடைய தம்பிகள் என்ன தனியா அனுப்ப மாட்டாங்க. பல்லாயிரக்கணக்கில் வரும்போது என் கட்சி கொடியை தூக்கிட்டு வருவாங்க. இன்னொருத்தரை கூப்பிட்டா அவர கட்சி கொடிய தூக்கிட்டு வருவாரு. ஒரு அண்ணனா நான் அதைத்தான் சொன்னேன். அவர் அதை தான் செய்வார் என சீமான் பேசியுள்ளார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.