பூர்விகா நிறுவன உரிமையாளர் கைது?!...2வது நாளாக இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!
Seithipunal Tamil October 18, 2024 11:48 PM

தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் செல்போன் விற்பனையில் முன்னணி நிறுவனமாக விளங்கி வரும் பூர்விகா நிறுவனம், கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையியில், 470-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளராக யுவராஜ் நடராஜன் விளங்கி வருகிறார்.

இந்த நிலையில், பூர்விகா நிறுவனத்தின் பிரதான கிளையாக சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் செயல்பட்டு வரும் நிலையில், அங்கு செல்போன், டேப்லெட்கள் மற்றும் டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏ.சி. உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிறுவனத்தில் நேற்று காலை 7 மணி முதல் 10க்கும் மேற்பட்ட வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடையில் ஏற்கனவே பணியில் இருந்த ஊழியர்களை தவிர்த்து புதிதாக வெளியிலிருந்து வரும் ஊழியர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்காமல் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், பூர்விகா உரிமையாள யுவராஜ் நடராஜனின் வீடு, சென்னை பள்ளிக்கரணை என 3 இடங்களில் நேற்று சோதனை நடைபெற்றது. வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த சோதனை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.