14 கோடி பணம்மோசடி செய்த சைபர் குற்றவாளிகளை கைது செய்த தமிழ்நாடு காவல்துறை!
Seithipunal Tamil October 22, 2024 05:48 AM

14 கோடி பணம்மோசடி செய்த சைபர் குற்றவாளிகளை கைது செய்த தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ளது.

சைபர் குற்றவாளிகள், WhatsApp மூலம் குழு தொடங்கி ஆன்லைன் மூலம் பங்கு சந்தையில் முதலீடு செய்து 500 மடங்கு லாபம் சம்பாதிக்கலாம் என அப்பாவி பொதுமக்கள் நம்பும் வகையில் Share Investment APP-களை உருவாக்கி அதில் பலரும் அதிக லாபம் பெற்றதுபோல போலியான செய்தி பரிமாற்றங்கள் செய்து பொது மக்களை நம்ப வைத்து Online Share Trading என்ற போர்வையில் பணம் பறித்து வந்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் வாட்சாப் மூலம் தொடர்பு கொண்ட சைபர் மோசடி கும்பலை சேர்ந்த ஒருவர் Black Rock Asset Management Business School என்ற நிறுவனம் வைத்திருப்பதாக தன்னைஅறிமுகப்படுத்திக் கொண்டு, முதலீடு செய்தால் இரண்டு மாதத்தில் 500% லாபம் பெற்று தருவதாக தெரிவித்துள்ளனர்.

முதலீடு மூலம் பெற்ற லாபத்தில் தனக்கு தர வேண்டும் என Charge Service %20 கூறி நம்ப வைத்து BRIIFLPRo என்ற மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்ய வைத்து, அதன் மூலம் பல்வேறு வங்கி கணக்குகளுக்கு ரூபாய் 14 கோடியை முதலீடு செய்ய வைத்துள்ளனர்.

இந்த நிலையில், முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்காத நிலையில் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தத அந்த நபர் National Cyber Crime Reporting Portal-ல் புகார் அளித்ததன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், மோசடி செய்யப்பட்ட பணம் வரவு வைக்கப்பட்ட 13 வங்கி கணக்குகள் உடனடியாக முடக்கம் செய்தனர்..

பின்னர் சென்னை அசோக் நகரில் உள்ள தலைமையக சைபர் கிரைம் தனிப்படை குழுவினர் விரைந்து செயல்பட்டு, செங்கல்பட்டை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை கைது செய்தனர்.

அவர் அளித்த வாக்குமூலத்தின்அடிப்படையில் தலைமறைவில் இருந்த சென்னை நீலாங்கரையை சேர்ந்த மதன், திருநின்றவூரை சேர்ந்த சரவணபிரியன், சென்னை-ஆவடியை சேர்ந்த சதீஷ்சிங், புளியந்தோப்பை சேர்ந்த ஷாபகத் மற்றும் மதுரை- பொன்மேனியை சேர்ந்த மணிகண்டன் ஆகிய சைபர் மோசடி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்..

குற்றவாளிகளிடமிருந்து குற்ற செயல்களுக்கு பயன்படுத்தப்பட்ட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்கு அனுப்பபட்டுள்ளது. இந்த சைபர் குற்ற செயல்களுக்கு மூளையாக செயல்பட்ட வடமாநில கும்பலை கைது செய்யவும் மோசடி செய்யபட்ட பணத்தை மீட்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.

பொதுமக்கள் இதுபோன்ற சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க கீழ்கண்டஅறிவுரைகள் வழங்கப்படுகிறது:-

பொதுமக்கள் இது போன்ற கவர்ச்சிகரமான தகவல்களை நம்பவேண்டாம் இதுபோன்ற மோசடிகளை அடையாளம் கண்டு கணினிசார் குற்றப் பிரிவு அல்லது காவல் நிலையத்தை தொடர்பு கொள்ள அருகிலுள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இது போன்ற அதிகபடியான லாபம் கொடுப்பதாக உத்திரவாதம் கொடுத்தால் அதில் [மோசடிக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது- விழிப்புடன் இருக்க அறிவுறுத்தபடுகிறார்கள்.

தனிப்பட்ட தகவல்கள் மற்றும் நிதி சார்ந்த தகவல்களை அறிமுகமில்லாத நபர்களிடம் தொலைபேசியில் அளிக்காதீர்கள்.
மோசடி செய்பவர்கள் நமக்கு யோசிக்க நேரமளிக்காமல் அவசரமான சூழலில் இருப்பதாக நம்ப செய்வர். நம்பகமான நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து செயல்படவும்.

சைபர் மோசடிகள் மற்றும் அவர்களின் ஏமாற்றுத்தந்திரங்களை தொடர்ந்து அறிந்து வைத்திருங்கள். குற்றம் நடைபெறாமல் தடுக்க விழிப்புடன் இருப்பது முக்கியம்.

உங்கள் வங்கி மற்றும் கடன் அட்டை (Credit Card) கணக்குகளில் அனுமதிக்கப்படாத பரிவர்த்தனைகள் ஏதும் உள்ளதா என தவறாமல் சரிபார்க்கவும்.
முக்கியமான கணக்குகளில் இரு காரணி பாதுகாப்பைப் பயன்படுத்தவும்.

மேலும், பொதுமக்கள் தங்களது வங்கிக்கணக்குகளை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் இது போன்ற கணக்குகள் நிதி மோசடிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. யாரேனும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

நீங்கள்இதுபோன்றமோசடிக்கு ஆளாகியிருந்தால், சைபர்கிரைம்கட்டணமில்லாஉதவிஎண்1930 ஐ டயல் செய்து சம்பவத்தைப் புகாரளிக்கவும் அல்லது www.cybercrime.gov.in இணையதளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்யவும்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.