பஞ்சாங்கம் அக்.22- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
Dhinasari Tamil October 22, 2024 06:48 AM
செந்தமிழன் சீராமன் astrology panchangam rasipalan dhinasari 3 இன்றைய பஞ்சாங்கம் – அக்.22

ஸ்ரீராமஜயம் | ஸ்ரீராம ஜயராம ஜய ஜய ராம

!!ஸ்ரீ:!!

श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

ஐப்பசி~ 05 (22. 10.2024) செவ்வாய் கிழமை.*
வருடம் ~ க்ரோதி வருடம் {க்ரோதி நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ தக்ஷிணாயனம்
ருது ~ சரத் ருது.
மாதம் ~ ஐப்பசி மாஸம் { துலா மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ 8.17 am வரை பஞ்சமி பின் ஷஷ்டி
நாள் ~ {பௌம வாஸரம்} செவ்வாய் கிழமை.
நட்சத்திரம் ~ 12.00 pm வரை மிருகசீரிஷம் பின் திருவாதிரை
யோகம் ~ பரிகம்
கரணம் ~ தைதுளை
அமிர்தாதியோகம் ~ சுபயோகம் அசுபயோகம்
ராகு காலம் ~ மாலை 3.00 ~ 4.30.
எமகண்டம் ~ காலை 9.00 ~ 10.30.
நல்ல நேரம் ~ காலை 7.30 to 9.00 am and 4.30 to 5.30 pm
குளிகை ~ மதியம் 12.00 ~ 1.30.
சூரியஉதயம் ~ காலை 6.05
சந்திராஷ்டமம்~ விருச்சிகம்
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்.
ஸ்ராத்ததிதி ~ ஷஷ்டி
இன்று ~

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்

स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

இன்றைய (22-10-2024) ராசி பலன்கள் மேஷம்

மேஷ ராசிக்கான பலன்கள் ..!

புதிய செயல்திட்டங்களை செயல்படுத்த முயல்வீர்கள். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தம்பதிகளுக்குள் நெருக்கம் மேம்படும். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். மனை விருத்திக்கான எண்ணங்கள் மேம்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். நேர்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்

அஸ்வினி : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
பரணி : பிரச்சனைகள் குறையும்.
கிருத்திகை : திருப்தியான நாள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்கான பலன்கள் ..!

குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். வெளிவட்டார நட்பு சிறப்பாக இருக்கும். பொருளாதார சிக்கல்கள் சீராகும். நண்பர்கள் மூலம் ஆதரவு கிடைக்கும். வசதி வாய்ப்புகள் மேம்படும். வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

கிருத்திகை : அமைதி உண்டாகும்.
ரோகிணி : ஆதரவு மேம்படும்.
மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்கான பலன்கள் ..!

கனிவான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். சகோதரர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய தொழில்நுட்ப கருவிகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : நம்பிக்கை மேம்படும்.
திருவாதிரை : மாற்றமான நாள்.
புனர்பூசம் : குழப்பம் நீங்கும்.

கடகம்

கடக ராசிக்கான பலன்கள் ..!

மனதளவில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். உயர்கல்வி தொடர்பான குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வெளி ஆட்களுடன் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். ஆடம்பரமான செலவுகளால் சேமிப்புகள் குறையும். ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

புனர்பூசம் : கட்டுப்பாடுகள் குறையும்.
பூசம் : அனுபவம் கிடைக்கும்.
ஆயில்யம் : சேமிப்புகள் குறையும்.

சிம்மம்

சிம்ம ராசிக்கான பலன்கள் ..!

எதிலும் தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சமூகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு குறையும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் நிமித்தமான உதவிகள் கிடைக்கும். தேர்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

மகம் : ஆதரவான நாள்.
பூரம் : சோர்வுகள் குறையும்.
உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசிக்கான பலன்கள் ..!

உத்தியோகஸ்தர்களுக்கு சாதகமான சூழல் அமையும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கையின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களிடம் பேசி மகிழ்வீர்கள். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். நிர்வாகத்துறையில் செய்யும் மாற்றங்களால் லாபம் அதிகரிக்கும். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திரம் : சாதகமான நாள்.
அஸ்தம் : மகிழ்ச்சி உண்டாகும்.
சித்திரை : லாபகரமான நாள்.

துலாம்

துலாம் ராசிக்கான பலன்கள் ..!

சக பணியாளர்களால் ஆதாயம் ஏற்படும். ஆன்மிக பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான கடன் உதவிகள் கிடைக்கும். இணையம் சார்ந்த தொழில்களில் முன்னேற்றம் உண்டாகும். பொறுமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை நிறம்

சித்திரை : ஆசிகள் கிடைக்கும்.
சுவாதி : ஆர்வம் ஏற்படும்.
விசாகம் : முன்னேற்றம் உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கான பலன்கள் ..!

நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளவும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வழக்கு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். உடல்நிலையில் சற்று சோர்வு, சுறுசுறுப்பின்மை ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். குடும்பத்தில் வீண் செலவு அதிகரிக்கும். வியாபார செயல்களில் கவனம் வேண்டும். சிந்தித்து செயல்படவேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

விசாகம் : அனுசரித்துச் செல்லவும்.
அனுஷம் : சுறுசுறுப்பான நாள்.
கேட்டை : செலவு அதிகரிக்கும்.

தனுசு

தனுசு ராசிக்கான பலன்கள் ..!

உறவினர்களுக்கிடையே உங்களின் மதிப்பு உயரும். திட்டமிட்ட பணிகளை இனிதே செய்து முடிப்பீர்கள். வெளியூர் தொழில் முயற்சிகளால் லாபம் அடைவீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். பணிகளில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை சுமூகமாக முடிக்க முயல்வீர்கள். கொடுக்கல், வாங்கலில் சற்று கவனம் வேண்டும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

மூலம் : மதிப்புகள் உயரும்.
பூராடம் : அனுகூலமான நாள்.
உத்திராடம் : கவனம் வேண்டும்.

மகரம்

மகர ராசிக்கான பலன்கள் ..!

அலுவலகப் பணியில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். பழகும் விதங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். விருத்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : ஒற்றுமை மேம்படும்.
திருவோணம் : மாற்றங்கள் பிறக்கும்.
அவிட்டம் : அனுசரித்துச் செல்லவும்.

கும்பம்

கும்ப ராசிக்கான பலன்கள் ..!

வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். தன வரவுகள் தேவைக்கு இருக்கும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் அமையும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

அவிட்டம் : அனுசரித்துச் செல்லவும்.
சதயம் : சிந்தனைகள் மேம்படும்.
பூரட்டாதி : மாற்றமான நாள்.

மீனம்

மீன ராசிக்கான பலன்கள் ..!

பெற்றோரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரிக்கும். கால்நடை பணிகளில் மேன்மை உண்டாகும். சிந்தித்துச் செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலைகளில் எதிர்பார்த்த சூழல் அமையும். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்சிவப்பு நிறம்

பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
உத்திரட்டாதி : முன்னேற்றமான நாள்.
ரேவதி : குழப்பம் விலகும்.

thiruvalluvar deivapulavar தினம் ஒரு திருக்குறள்

அதிகாரம்: புலால் மறுத்தல் | குறள் 254:

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.

மு.வ உரை: அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.

தினம் ஒரு திருமுறை

மறை – 1. பதிகம் – 44 பாடல் – 1

44வது பதிக பாடல்கள் அனைத்தும் திருப்பாச்சிலாச்சிராமம் திருத்தலத்தில் பாடல் பெற்றவை ஆகும்

துணிவளர்திங்கள் துளங்கிவிளங்கச் சுடர்ச்சடை சுற்றிமுடித்துப்
பணிவளர்கொள்கையர் பாரிடஞ்சூழ வாரிடமும் பலிதேர்வர்
அணிவளர்கோல மெலாஞ்செய்துபாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
மணிவளர்கண்டரோ மங்கையைவாட மயல்செய்வதோ விவர்மாண்பே .

விளக்கவுரை :

முழுமதியினது கீற்றாக விளங்கும் பிறைமதியை விளங்கித் திகழுமாறு அதனைத் தம் ஒளி பொருந்திய சடையினைச் சுற்றிக் கட்டி, பாம்புகளை அணிந்தவராய்ப் பூதங்கள் தம்மைச்சூழ எல்லோரிடமும் சென்று பலியேற்பவராய், அழகிய தோற்றத்துடன் விளங்கும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற நீலமணி போலும் கண்டத்தவராகிய இறைவர், கொல்லிமழவன் மகளாகிய இப்பெண்ணை மயல் செய்வது மாண்பாகுமோ?

தினம் ஒரு பாசுரம்

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

முழுதும் வெண்ணெயளைந்து தொட்டுண்ணும்
முகிழிளஞ் சிறுத்தாமரைக் கையும்,
எழில்கொள் தாம்பு கொண்டடிப்பதற்கு எள்கு நிலையும்
வெண்தயிர் தோய்ந்த செவ்வாயும்,
அழுகையும் அஞ்சிநோக்கும் அந்நோக்கும்
அணிகொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும்,
தொழுகையும் இவை கண்ட அசோதை
தொல்லையின்பத்திறுதி கண்டாளே”

  • குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி
    (கண்ணனது பால லீலைகளைக் காணப்பெறாத தேவகியின் புலம்பல் – 715).

வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்…
தினசரி .காம்

News First Appeared in
© Copyright @2024 LIDEA. All Rights Reserved.