திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் - கூட்டணி கட்சி போர்க்கொடி!
Seithipunal Tamil October 22, 2024 06:48 AM

கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தொழிலாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பிரச்சார இயக்கம் நடத்த முடிவு உள்ளதாக அகில இந்திய மத்திய தொழிற்சங்க கவுன்சிலின் (ஏஐசிசிடியு - கம்னியூஸ்ட் கட்சியின் அமைப்பு) முடிவு செய்துள்ளது.

ஏஐசிசிடியு-வின் சென்னை பெருநகர மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு பிப்ரவரி 24, 25, 26 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறும் ஏஐசிசிடியு அகில இந்திய மாநாட்டை வெற்றிகரமாக்க, நவம்பர், டிசம்பர் மாதங்களில் 

தொழிலாளர் விரோத மோடி அரசை கண்டித்தும்,

தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், 

திமுக அரசு தேர்தலில் தொழிலாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும் தமிழகம் முழுவதும் பிரச்சார இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 10,000 உறுப்பினர் சேர்க்கை, மாநாட்டு நிதியாக ரூ.1 லட்சம் திரட்டுவது, கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.15 ஆயிரம் வழங்கிடக் கோரி ஜனவரி 7-ம் தேதி சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்தை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.