பஞ்சாங்கம் அக்.21 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
Dhinasari Tamil October 22, 2024 01:48 PM
செந்தமிழன் சீராமன் astrology panchangam rasipalan

||श्री:|| 

ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்

இன்றைய பஞ்சாங்கம் – அக்.21

श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

ஐப்பசி ~ 4 (21.10.2024) திங்கள் கிழமை*
வருடம் ~ க்ரோதி வருடம் {க்ரோதி நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ தக்ஷிணாயனம்
ருது ~ சரத் ருது.
மாதம்~ ஐப்பசி மாஸம் { துலா மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ 9.35 am வரை சதுர்த்தி பின் பஞ்சமி
நாள் ~ {ஸோம வாஸரம்} திங்கள் கிழமை.
நட்சத்திரம் ~ 12.33 pm வரை ரோஹிணி பின் மிருகசீரிஷம்
யோகம் ~ வரியான்
கரணம் ~ பாலவம்
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
ராகுகாலம்~ காலை 7.30 ~ 9.00.
எமகண்டம் ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
நல்ல நேரம் ~ 9.to 10.30am 5to.5.30 pm
குளிகை ~ மதியம் 1.30 ~ மாலை 3.00.
சூரியஉதயம் ~ காலை 6.06
சந்திராஷ்டமம் ~ துலாம்
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்.
ஸ்ராத்ததிதி ~ பஞ்சமி 
இன்று ~

स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु॥

!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
!!धर्मो रक्षति रक्षित:!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திங்கள் ஓரைகளின் காலம்

காலை

6-7. சந்திரன். சுபம்
7-8. சனி அசுபம்
8-9. குரு. சுபம்
9-10. .செவ்வா. அசுபம்
10-11. சூரியன். அசுபம்
11-12. சுக்கிரன். சுபம்

பிற்பகல்

12-1. புதன். சுபம்
1-2. சந்திரன். சுபம்
2-3. சனி அசுபம்

மாலை

3-4. குரு. சுபம்
4-5. செவ்வாய் அசுபம்
5-6. சூரியன் அசுபம்
6-7. சுக்கிரன். சுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..

இன்றைய (21-10-2024) ராசி பலன்கள்

மேஷம்

மேஷ ராசிக்கான பலன்கள் ..!

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். வியாபாரப் பணிகளில் முன்னேற்றத்திற்கான செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சொத்து விற்பது தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் படிப்படியாக குறையும். பணிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அஸ்வினி : பிரச்சனைகள் குறையும்.
பரணி : துரிதம் உண்டாகும்.
கிருத்திகை : இன்னல்கள் குறையும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்கான பலன்கள் ..!

விவாதங்கள் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் முன்னேற்றம் ஏற்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கான சூழ்நிலை உண்டாகும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். வெளியூர் பயணங்கள் செல்வதற்கான சூழ்நிலை உண்டாகும். வியாபாரப் பணிகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

கிருத்திகை : சாதகமான நாள்.
ரோகிணி : அனுபவம் வெளிப்படும்.
மிருகசீரிஷம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்கான பலன்கள் ..!

எதிலும் வேகமின்றி பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும். மனதில் தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. உடன்பிறந்தவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். உத்தியோக முயற்சிகளில் காலதாமதமான பலன்கள் கிடைக்கும். பிற்கால வாழ்க்கை பற்றிய எண்ணம் மேம்படும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : பொறுமையுடன் செயல்படவும்.
திருவாதிரை : அனுசரித்துச் செல்லவும்.
புனர்பூசம் : எண்ணம் மேம்படும்.

கடகம்

கடக ராசிக்கான பலன்கள் ..!

பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். தனவரவுகளுக்கேற்ப விரயங்களும் உண்டாகும். வித்தியாசமான கற்பனைகளால் மனதில் குழப்பம் உண்டாகும். கடன் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். புதிய வீடு மற்றும் நிலம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : அனுபவம் உண்டாகும்.
பூசம் : தீர்வுகள் கிடைக்கும்.
ஆயில்யம் : தெளிவுகள் பிறக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்கான பலன்கள் ..!

நுணுக்கமான விஷயங்கள் மூலம் லாபம் அதிகரிக்கும். மனதில் வாகன மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். செலவுகளின் தன்மைகளை அறிந்து மேற்கொள்வது சேமிப்பிற்கு நன்மை அளிக்கும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். பரிசு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மகம் : லாபகரமான நாள்.
பூரம் : சேமிப்பு மேம்படும்.
உத்திரம் : கவனம் வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்கான பலன்கள் ..!

தொழில் முதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கல்வியில் தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தம் சார்ந்த விஷயங்கள் சாதகமாக நிறைவுபெறும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி உற்சாகம் உண்டாகும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். அரசு ரீதியிலான உதவிகள் சிலருக்கு சாதகமாக அமையும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.
அஸ்தம் : உற்சாகம் பிறக்கும்.
சித்திரை : சாதகமான நாள்.

துலாம்

துலாம் ராசிக்கான பலன்கள் ..!

எதிர்பாராத அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் மூலம் ஆதரவான சூழ்நிலை ஏற்படும். தனவரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். வாழ்க்கை துணை வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கல்விப் பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

சித்திரை : அனுகூலமான நாள்.
சுவாதி : மகிழ்ச்சியான நாள்.
விசாகம் : முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கான பலன்கள் ..!

மற்றவர்கள் கூறும் கருத்துகளில் உள்ள உண்மையை அறிந்து முடிவுகளை எடுக்கவும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களில் புதுவிதமான அறிமுகமும், அனுபவங்களும் ஏற்படும். வியாபார முதலீடுகள் அதிகரிக்கும். விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் செயல்படவும். எதிர்பாலின மக்கள் தொடர்பான விஷயங்களை சிந்தித்துச் செயல்படுவது அவசியம். நட்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்

விசாகம் : மாற்றங்கள் உண்டாகும்.
அனுஷம் : முதலீடுகள் அதிகரிக்கும்.
கேட்டை : சிந்தித்துச் செயல்படவும்.

தனுசு

தனுசு ராசிக்கான பலன்கள் ..!

புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றமும், மகிழ்ச்சியான தருணங்களும் ஏற்படும். வரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். திறமையான பேச்சுக்கள் மூலம் காரிய சித்திகள் உண்டாகும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். பாராட்டு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்

மூலம் : அறிமுகங்கள் ஏற்படும்.
பூராடம் : ஆதாயம் உண்டாகும்.
உத்திராடம் : ஆதரவுகள் கிடைக்கும்.

மகரம்

மகர ராசிக்கான பலன்கள் ..!

உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலை அமையும். கால்நடைகள் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். வியாபாரப் பணிகளில் லாபம் மேம்படும். மனை சார்ந்த கடன் உதவிகள் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் எதிர்பார்த்த முடிவினை அளிக்கும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. குழப்பம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.
அவிட்டம் : அனுசரித்துச் செல்லவும்.

கும்பம்

கும்ப ராசிக்கான பலன்கள் ..!

திட்டமிட்ட காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். பெரியோர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அனுகூலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
சதயம் : எதிர்ப்புகள் குறையும்.
பூரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

மீனம்

மீன ராசிக்கான பலன்கள் ..!

வாக்கு சாதுரியம் மூலம் லாபங்களைப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் செலுத்துவீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தாய்வழி உறவுகளிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியான சூழ்நிலை உண்டாகும். ஆசைகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

பூரட்டாதி : கருத்துவேறுபாடுகள் குறையும்.
உத்திரட்டாதி : ஒத்துழைப்பு மேம்படும்.
ரேவதி : புத்துணர்ச்சியான நாள்.

தினம் ஒரு திருக்குறள்

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை (1228)

– முன்னெல்லாம் இனியதாய்ப் போந்த ஆயன் குழல், இப்பொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய், அது வந்து என்னைக் கொல்லும் படையும் ஆயிற்று. நெருப்புப் போலச் சுடும் மாலைக் காலத்திற்கு இடையனின் புல்லாங்குழல் தூதாக வந்து பின் கொல்லும் படைக்கருவி போன்று வருத்தும் என்பது உரை.

மாயனாகிய இடையன் கண்ணபிரானின் புல்லாங்குழல் என்பதே அன்றைய சமூகத்தில் புகழ்பெற்றிருந்த அடையாளம். அதனையே இங்கே குறளில் கையாண்டார் வள்ளுவர்.

தினம் ஒரு திருமுறை

மறை – 2 பதிகம் – 61 பாடல் – 6

ஒளிகொண் மேனி யுடையா யும்ப ராளீயென்
றளிய ராகி யழுதுற் றூறு மடியார்கட்
கெளியா னமரர்க் கரியான் வாழு மூர்போலும்
வெளிய வுருவத் தானை வணங்கும் வெண்காடே.

விளக்கவுரை

ஒளி கொண்ட திருமேனியை உடையவனே! உம்பர்களை ஆள்பவனே! என்று அன்புடையவராய் அழுது பொருந்தும் அடியவர்க்கு எளியவன். தேவர்களுக்கு அரியவன் ஆகிய சிவபிரானது ஊர் வெண்ணிறமுடைய ஐராவதம் வணங்கி அருள் பெற்ற திருவெண்காடாகும்.

News First Appeared in
© Copyright @2024 LIDEA. All Rights Reserved.