அதிர்ச்சி…! காளான் சமைத்து சாப்பிட்ட குடும்பம் மருத்துவமனையில் அனுமதி… நடந்தது என்ன…?
SeithiSolai Tamil October 22, 2024 07:48 PM

சென்னை மாவட்டத்தில் உள்ள புட்லூர் ஆப்டெக்ஸ் நகரில் லட்சுமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் இவரது வீட்டிற்கு அருகே காளான்கள் முளைத்தது. அதனை பறித்து சமைத்து லக்ஷ்மி(46), அவரது குடும்பத்தைச் சேர்ந்த சாந்தி(45), அலமேலு(31), வெங்கடேஷ்(23), சரண்யா(14) ஆகியோர் சாப்பிட்டுள்ளனர்.

ஒரு சில மணி நேரத்தில் ஐந்து பேரும் வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கத்தால் அவதிப்பட்டனர். உடனே ஐந்து பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஐந்து பேரும் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.