40 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணைய தயார்: அப்பாவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!
Seithipunal Tamil October 23, 2024 02:48 AM

அதிமுக நிர்வாகி பாபு முருகவேலின் அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரிய சபாநாயகர் அப்பாவு தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 40 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணைய தயாராக இருப்பதாக சபாநாயகர் அப்பாவு பேசியதற்கு, அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வ்சந்தபோது, அப்பாவு தெரிவித்த கருத்து எப்படி அவதூறாகும் என கடந்த விசாரணையில் நீதிபதி தெரிவித்திருந்தார்.

இன்றைய வழக்கு விசாரணையின்போது, மனுதாரர் பாதிக்கப்பட்டவர் இல்லை என்பதால் அவர் அவதூறு வழக்கு தாக்கல் செய்ய முடியாது என, அப்பாவு தரப்பு வழக்கறிஞர் வில்சன் வாதம் வைத்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் இதாவது உத்தரவிட்டுள்ளார். 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.