நாட்டில் சமீப காலமாக தெரு நாய்களால் ஏற்படும் பிரச்சனைகள் என்பது அதிகரித்துவிட்டது. தெருக்களில் செல்லும் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை தெரு நாய்கள் கடித்து உயிரிழக்கும் சம்பவங்கள் கூட அரங்கேறுகிறது. தெருநாய்கள் கடித்ததால் சிலர் ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்டு மரணமடைந்துவிட்டனர். அதோடு பலர் தெரு நாய் கடித்ததால் காயத்திற்கு உள்ளாகினர். இதன் காரணமாக தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகிறது. அந்த வகையில் தற்போது தெருநாயால் ஒரு உயிர் பறிபோகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது விவி பிரைட் ஹோட்டலுக்குள் திடீரென ஒரு நாய் நுழைந்துள்ளது.
இந்த நாய் அங்கு உலவுவதை உதய்குமார் (24) என்ற வாலிபர் கவனித்தார். இவர் நாயை வெளியே அனுப்புவதற்காக அதனை துரத்திக் கொண்டு சென்றார். அந்த வாலிபர் ஓடும்போது நாய் ஜன்னல் அருகே சென்றது. அதனை துரத்திக் கொண்டு ஓடி வந்த உதய் எதிர்பாராத விதமாக ஜன்னல் வழியே கீழே விழுந்துவிட்டார். அவர் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்ததால் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே மரணித்தார். இதனைப் பார்த்து அங்கிருந்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கும் இங்கும் உலவுகிறார்கள். இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பதற வைப்பதாக அமைந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.