முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய் அதை 2007ல் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து இந்தியில் பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். அதேசமயம் விவேக் ஓபராய், சல்மான் கான் இவர்களுடன் காதல் சர்ச்சைகளிலும் சிக்கினார். இத்தம்பதிக்கு ஆராத்யா பச்சன் என்ற மகளும் உள்ளார்.
சுமூகமாக சென்று கொண்டிருந்த ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் குடும்ப வாழ்வில் விரிசல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியில் இந்த பிரச்சனை தொடங்கியது.அம்பானி இல்ல திருமண விழாவிற்கு பச்சன் குடும்பத்தினர் ஒன்றாக சென்ற நிலையில் ஐஸ்வர்யா ராயும், அவரது மகள் ஆராத்யாவும் தனியாக சென்றிருந்தனர். அதனைத் தொடர்ந்து SIIMA Awards விருது நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய்க்கு விருது அளித்தபோது அதில் அபிஷேக் பச்சன் கலந்து கொள்ளவில்லை.
ஐஸ்வர்யா ராயின் குடும்பத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் ஐஸ்வர்யா ராயும், அவரது மகள் ஆராத்யாவும் கலந்து கொண்டனர். ஆனால் அபிஷேக் பச்சன் கலந்து கொள்ளவில்லை. சமீபமாக எந்த நிகழ்ச்சிகளிலும் இருவரும் ஒன்றாக செல்லாமல் தனித்தனியாக சென்று வருவது தான் இந்த விவாகரத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.