அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்த பிஎஸ்என்எல்.... விரைவில் 5ஜி சேவை....
ET Tamil October 23, 2024 11:48 PM
பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு அதிரடி திட்டங்களை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் மிகவும் பழமையான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், கடந்த சில ஆண்டுகளாக பெரிய வளர்ச்சி இல்லாமல் இருந்து வந்தது. இதனால் தொலைத்தொடர்பு துறையில் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கமும் அதிகரித்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ, பார்தி ஏர்டெல் நிறுவனம் பெரும் அளவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையிலான சேவைகளை வழங்கி வருகிறது. இப்படி இருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் என அனைத்து நிறுவனங்களும் ரிசார்ஜ் கட்டணங்களை உயர்த்தின. இதனால் பெரும் அதிர்ச்சிக்குள்ளான வாடிக்கையாளர்கள் பலரும் பிஎஸ்என்எல் மாறினார். இது பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு உற்சாகமுட்டும் விதமாக அமைந்தது. நிதி நெருக்கடி, புதிய அப்டேட் இல்லாதது என இருந்த பிஎஸ்என்எல் நிறுவனத்தை பழைய நிலைக்கு கொண்டு வர மத்திய அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 2024-24ம் ஆண்டு பட்ஜெட்டிலும் குறிப்பிட அளவு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டது. பிஎஸ்என்எல் நிறுவனம் குறிப்பிட்ட சில வட்டாரங்களில் 4ஜி சேவையை வழங்கி வருகிறது. விரைவில் 5 ஜி சேவையை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில் அக்டோபர் 22ம் தேதியான இன்று பிஎஸ்என்எல் நிறுவனத்தின் லோகோவை மாற்றியுள்ளது. இதுமட்டும் இல்லாமல் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு வகையில் பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக நாடுமுழுவதும் 4ஜி சேவையை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. புதிய அப்டேட்களின் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு சேவையை மேம்படுத்த உள்ளது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு தேவையற்ற அழைப்புகள், எஸ் எம் எஸ் ஆகியவற்றை தடுக்கும் வகையில் ஸ்பேம் இல்லாத நெட்வொர்க் என பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிஎஸ்என்எல் 7 புதிய சேவைகள் தொடங்கப்பட்டுள்ளனபிஎஸ்என்எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு ஃபைபர் இணைய வசதியுடன், நாடு முழுவதும் வைஃபை ரோமிங் சேவையையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் ஹாட்ஸ்பாட்களில் கூடுதல் கட்டணங்கள் இல்லாமல் அதிவேக இணையத்தை பயன்படுத்த முடியும். மேலும் டேட்டாவுக்கான செலவையும் வாடிக்கையாளர்கள் குறைக்க வசதியாக இருக்கும். இதுமட்டும் இல்லாமல் பிஎஸ்என்எல் (BSNL) ஒரு புதிய ஃபைபர் அடிப்படையிலான டிவி சேவையை அறிவித்துள்ளது. இதில் 500 க்கும் மேற்பட்ட நேரடி சேனல்கள் மற்றும் கட்டண டிவி வசதி இருக்கும் என தெரிவித்துள்ளது. இதற்காக கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய தேவை இருக்காது. டிவி ஸ்ட்ரீமிங் செய்யப் பயன்படுத்தப்படும் டேட்டா வாடிக்கையாளர்களின் மாதாந்திர இணையத்தில் கணக்கிடப்படாது என்றும் தெளிவுப்படுத்தியுள்ளது. தானியங்கி கியோஸ்க்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் சிம் கார்டுகளை நிர்வகிப்பதை எளிதாக்க உள்ளதாக பிஎஸ்என்எல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த கியோஸ்க்குகள் மக்கள் தங்கள் சிம் கார்டுகளை எளிதாக வாங்க, மேம்படுத்த அல்லது மாற்ற முடியும். இதன் மூலமாக வாடிக்கையாளர்களை எளிதாக ஈர்க்க முடியும். பிஎஸ்என்எல் மிக முக்கியமான, மிகவும் அவசியமான திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. C-DAC உடன் இணைந்து சுரங்க நடவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பு தனியார் 5ஜி நெட்வொர்க்கை வழங்கியுள்ளது. இந்த புதிய நெட்வொர்க் உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது மற்றும் மேம்பட்ட கருவிகள் மற்றும் நிகழ்நேர கண்காணிப்பை செயல்படுத்துவதன் மூலம் சுரங்கங்களில் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதை இலக்காக வைத்துள்ளது. சுரங்க பணியில் ஈடுபடும் போது பயன்படுத்தப்படும் கருவிகளின் பயன்பாட்டை எளிமையாக்க உதவும். கடைசியாக, பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தியா மக்களுக்கு அதிமுக்கிய சிறப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது Direct-to-Device (D2D)சேவையை அறிமுகப்படும் முதல் நிறுவனம் ஆகும். இதன் மூலமாக அவசர காலங்களில் நெட்வொர்க் இல்லாத இடங்களிலும் இந்த வசதியின் மூலமாக் நெட்வொர்க்கை பெற முடியும். செயற்கைக்கோள் மற்றும் மொபைல் நெட்வொர்க்குகளை இணைக்கிறது. இதன் மூலமாக இணைய வசதி இல்லாத இடங்களிலும் டிஜிட்டல் பேமெண்ட் மேற்கொள்ள முடியும். பிஎஸ்என்எல் சந்தாதாரர்களுக்கு ஒரு அற்புதமான புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் பேன்சி மொபைல் எண்களைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது. 9444133233 மற்றும் 94444099099 போன்ற பேன்சி எண்களின் e-auctions நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்த e-auctionsகான தேதிகளையும் அறிவித்துள்ளது. உத்திரபிரதேசத்தின் கிழக்கு, சென்னை மற்றும் ஹரியானாவில் e-auctions நடைபெற உள்ளது. தனியார் துறை நிறுவனங்கள் பெரும் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு மாற்றங்கள் மற்றும் புதிய வசதியின் மூலமாக வாடிக்கையாளர்களை கவர ஆட்டத்தை தொடங்கியுள்ளன.
© Copyright @2024 LIDEA. All Rights Reserved.