தமிழ்நாடு தான் நம்பர் 1 மாநிலமாக திகழ்கிறது - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!
Seithipunal Tamil October 25, 2024 06:48 AM

கடந்த 21 நாட்களாக நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பரிசு வழங்கப்படுகிறது.

இந்த விழாவிற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி மற்றும் அமைச்சர்கள் வருகை தந்தனர். 

இந்த விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "தமிழ்நாட்டின் ஒலிம்பிக் என சொல்லும் அளவிற்கு முதலமைச்சர் கோப்பை உயர்ந்துள்ளது. அந்த அளவிற்கு போட்டிகளை பிரமாண்டமாக நடத்திக் காட்டியுள்ளோம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளையாட்டை Extra curricular ஆக்டிவிட்டியாகவோ, Co curricular ஆக்டிவிட்டியாகவோ பார்க்கவில்லை. அவர் விளையாட்டை Main curricular ஆக்டிவிட்டியாகவே பார்க்கிறார்.

முதலமைச்சர் கோப்பை 2024 போட்டிகளுக்கு ரூ.83 கோடி ஒதுக்கப்பட்டு, ரூ.37 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே ஒரு மாநில அரசால் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டியில் அதிக வீரர்கள் கலந்து கொள்வதிலும், அதிக பரிசுத் தொகை வழங்கப்படுவதிலும் தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக திகழ்கிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளையாட்டை Extra curricular ஆக்டிவிட்டியாகவோ, Co curricular ஆக்டிவிட்டியாகவோ பார்க்கவில்லை. அவர் விளையாட்டை Main curricular ஆக்டிவிட்டியாகவே பார்க்கிறார்" என்று உதயநிதி பேசினார்.

முதலமைச்சர் கோப்பை 2024 போட்டிகளில் 105 தங்கம், 80 வெள்ளி, 69 வெண்கலப் பதக்கங்கள் வென்று சென்னை முதலிடம் பெற்றது.  31 தங்கத்துடன் செங்கல்பட்டு 2ம் இடமும், 23 தங்கத்துடன் கோவை 3ம் இடமும், 21 தங்கத்துடன் சேலம் 4வது இடமும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.