ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 40 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணைய தயாராக இருப்பதாக சபாநாயகர் அப்பாவு பேசியதற்கு, அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வ்சந்தபோது, அப்பாவு தெரிவித்த கருத்து எப்படி அவதூறாகும் என கடந்த விசாரணையில் நீதிபதி தெரிவித்திருந்தார்.
வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையின்போது, மனுதாரர் பாதிக்கப்பட்டவர் இல்லை என்பதால் அவர் அவதூறு வழக்கு தாக்கல் செய்ய முடியாது என, அப்பாவு தரப்பு வழக்கறிஞர் வில்சன் வாதம் வைத்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் இதாவது உத்தரவிட்டு இருந்தார்.
இந்நிலையில், அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக அப்பாவு-வுக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.