பஞ்சாங்கம் அக்.25 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
Dhinasari Tamil October 26, 2024 06:48 AM
செந்தமிழன் சீராமன் astrology panchangam rasipalan dhinasari 3 இன்றைய பஞ்சாங்கம் அக்.25 – வெள்ளி

தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்

||श्री:||

!!श्रीरामजयम!!

!!ஸ்ரீ:!!

!!ஸ்ரீராமஜயம்!!

श्री: श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

ஐப்பசி~ 8 (25.10.2024) வெள்ளி கிழமை.*
வருடம் ~ க்ரோதி
{க்ரோதி நாம சம்வத்ஸரம்}.
அயனம்~ தெக்ஷிணாயனம்
ருது ~ சரத் ருது.
மாதம்~ ஐப்பசி மாஸம் { *துலா மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ 7 12 am வரை அஷ்டமி பின் நவமி
நாள் ~ {ப்ருஹு வாஸரம்) வெள்ளி கிழமை.
நட்சத்திரம் ~ 1.07 pm வரை பூசம் பின் ஆயில்யம்
யோகம் ~ ஸாத்தம்
கரணம் ~ கௌளவம்
அமிர்தாதியோகம் ~ அசுபயோகம்
நல்ல நேரம் ~ காலை 6.00 ~ 7.30 & மாலை 5.00 ~ 6.00.
ராகு காலம் ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
எமகண்டம்~ மாலை 3.00 ~ 4.30.
குளிகை ~ காலை 7.30 ~ 9.00.
சூரிய உதயம் ~ காலை 6.07
சந்திராஷ்டமம் ~ தனுசு
சூலம் ~ மேற்கு
பரிகாரம் ~ வெல்லம்.
ஸ்ரார்த்த திதி ~ நவமி
இன்று ~

!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः |
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ||
   !!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
   !!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்..

வெள்ளிக்கிழமை ஹோரை

காலை
6-7. சுக்கிரன். சுபம்
7-8. புதன். சுபம்
8-9. சந்திரன். சுபம்
9-10. சனி.. அசுபம்
10-11. குரு. சுபம்
11-12. செவ்வா. அசுபம்

பிற்பகல்
12-1. சூரியன். அசுபம்
1-2. சுக்கிரன். சுபம்
2-3. புதன். சுபம்

மாலை
3-4. சந்திரன் சுபம்
4-5. சனி.. அசுபம்
5-6. குரு. சுபம்
6-7. செவ்வா. அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

இன்றைய ராசிபலன்கள் -25.10.2024

மேஷம்

மேஷ ராசிக்கான பலன்கள்..!

உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். ஒப்பந்த செயல்களில் கவனம் வேண்டும். சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். எதிர்பார்த்திருந்த உதவிகள் அலைச்சலுக்கு பின்பு கிடைக்கும். கல்வி சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். விவசாயப் பணிகளில் மேன்மை ஏற்படும். வாகன பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். தடைகள் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அஸ்வினி : கவனம் வேண்டும்.
பரணி : ஆலோசனைகள் கிடைக்கும்.
கிருத்திகை : அனுபவங்கள் கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்கான பலன்கள்..!

உயர்கல்வி தொடர்பான உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். மருத்துவத் துறையில் ஆதாயம் ஏற்படும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். வழக்கு விஷயங்களில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். தந்தை வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். புதுவிதமான ஆடைகளில் ஆர்வம் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.
ரோகிணி : ஆதாயகரமான நாள்.
மிருகசீரிஷம் : ஆர்வம் ஏற்படும்.

மிதுனம்

மிதுன ராசிக்கான பலன்கள்..!

மனதில் புரட்சிகரமான சிந்தனைகள் மேம்படும். கணிதத் துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். பேச்சுக்களால் ஆதாயம் அடைவீர்கள். மனை விற்றல், வாங்கலில் லாபம் ஏற்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.
திருவாதிரை : லாபகரமான நாள்.
புனர்பூசம் : புரிதல் உண்டாகும்.

கடகம்

கடக ராசிக்கான பலன்கள்..!

சமூகப் பணிகளில் மேன்மை ஏற்படும். பழைய பிரச்சனைகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். உடல் தோற்றத்தில் மாற்றம் உண்டாகும். அலுவலகப் பணிகளில் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிக்கடியான சூழல் உண்டாகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

புனர்பூசம் : மேன்மை ஏற்படும்.
பூசம் : அனுசரித்துச் செல்லவும்.
ஆயில்யம் : செல்வாக்குகள் மேம்படும்.

சிம்மம்

சிம்ம ராசிக்கான பலன்கள்..!

நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். மறதியால் செயலில் தாமதம் ஏற்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். வெளியூர் வேலை வாய்ப்புகள் சாதகமாக அமையும். பலரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : புரிதல் மேம்படும்.
பூரம் : தாதமதம் ஏற்படும்.
உத்திரம் : வாய்ப்புகள் சாதகமாகும்.

கன்னி

கன்னி ராசிக்கான பலன்கள்..!

பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். தனிப்பட்ட செயல்களில் கவனம் வேண்டும். பலம், பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். ஆடம்பரமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். சுபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

உத்திரம் : இலக்குகள் பிறக்கும்.
அஸ்தம் : புரிதல் மேம்படும்.
சித்திரை : ஆர்வம் உண்டாகும்.

துலாம்

துலாம் ராசிக்கான பலன்கள்..!

மனதளவில் உத்வேகம் உண்டாகும். சுபகாரியங்களில் கலந்து கொள்வீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் சில சூட்சமங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். மறைமுக விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். அனுபவம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : உத்வேகமான நாள்.
சுவாதி : சூட்சமங்களை அறிவீர்கள்.
விசாகம் : ஆர்வம் மேம்படும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கான பலன்கள்..!

மறைமுகமாக இருந்துவந்த போட்டிகள் விலகும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உடன்பிறப்புகளின் வழியில் ஒத்துழைப்பான சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கு உண்டான மதிப்பு கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் புரிதல் உண்டாகும். விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் சாதகமான சூழல் ஏற்படும்.
தன்னம்பிக்கை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

விசாகம் : போட்டிகள் விலகும்.
அனுஷம் : மதிப்புகள் கிடைக்கும்.
கேட்டை : சாதகமான நாள்.

தனுசு

தனுசு ராசிக்கான பலன்கள்..!

எதிலும் படபடப்பு இன்றி செயல்படவும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வியாபார விஷயங்களில் விவேகம் வேண்டும். சக ஊழியர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கால்நடைப் பணிகளில் விழிப்புணர்வுடன் இருக்கவும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்.

மூலம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூராடம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
உத்திராடம் : விழிப்புணர்வுடன் செயல்படவும்.

மகரம்

மகர ராசிக்கான பலன்கள்..!

கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நண்பர்களால் அனுகூலம் ஏற்படும். வழக்குகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். மனதில் இருந்துவந்த கவலைகள் மறையும். சகோதரர்களால் ஆதாயம் ஏற்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். காணாமல் போன சில பொருட்கள் கிடைக்கும். வர்த்தகத் துறையில் மேன்மை ஏற்படும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்

உத்திராடம் : அனுகூலமான நாள்.
திருவோணம் : ஆதாயகரமான நாள்.
அவிட்டம் : மேன்மையான நாள்.

கும்பம்

கும்ப ராசிக்கான பலன்கள்..!

சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். அரசு காரியங்களில் அனுகூலம் ஏற்படும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். சிந்தனைகளில் கவனம் வேண்டும். பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : மேன்மை ஏற்படும்.
சதயம் : அனுகூலமான நாள்.
பூரட்டாதி : தீர்வுகள் கிடைக்கும்.

மீனம்

மீன ராசிக்கான பலன்கள்..!

தாயார் வழியில் ஆதரவு ஏற்படும். வாடிக்கையாளர்களின் அறிமுகம் உண்டாகும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. கலைசார்ந்த துறைகளில் மதிப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் பொறுமை வேண்டும். பாரம்பரிய விஷயங்களில் ஆர்வமின்மை ஏற்படும். சஞ்சலமான சிந்தனைகள் மூலம் குழப்பம் உண்டாகும். காரியசித்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : அறிமுகம் உண்டாகும்.
உத்திரட்டாதி : மதிப்புகள் அதிகரிக்கும்.
ரேவதி : குழப்பமான நாள்.

தினம் ஒரு திருக்குறள்

அத்காரம் – 1 – கடவுள் வாழ்த்து : குறள் 5

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

மு.வரதராசனார் உரை:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

பரிமேலழகர் உரை:
இருள்சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை ‘இருள்’ என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் ‘இருவினையும் சேரா’ என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் – எப்பொழுதும் சொல்லுதல்).

மணக்குடவர் உரை:
மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும், இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழினை விரும்பினவர் இடத்தில் ஏற்படுவதில்லை.

தினம் ஒரு திருமுறை

மறை – 2 பதிகம் – 61 பாடல் – 11

விடையார் கொடியான் மேவி யுறையும் வெண்காட்டைக்
கடையார் மாடங் கலந்து தோன்றுங் காழியான்
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்க்
கடையா வினைக ளமர லோகம் ஆள்வாரே.

விளக்கவுரை : விடைக் கொடியைக் கொண்ட சிவபிரான் மேவி உறையும் வெண்காட்டை. கடைவாயிலை உடைய மாடவீடுகள் கலந்து விளங்கும் காழிப்பதியானாகிய ஞானசம்பந்தன் ஒழுக்கநெறியும் இன்சொல்லும் கலந்ததாக அமைத்த இப்பதிகத் தமிழை ஓத வல்லவர்களை வினைகள் அடையா. அவர் அமரலோகம் ஆள்வர்.

News First Appeared in
© Copyright @2024 LIDEA. All Rights Reserved.