மதுரையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவர் சரவணன் உதவி!
Top Tamil News October 27, 2024 11:48 AM

மதுரையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா சரவணன் வழங்கினார்.

மதுரையில் வரலாறு காண அளவில் மழை பெய்ததால் செல்லூர் ,நரிமேடு போன்ற பல்வேறு பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கழக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா சரவணன் காய்கறிகள், மளிகை பொருட்கள், பால் மற்றும் உணவு ஆகியவற்றை வழங்கினார். அவருடன் மாமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், மாயத்தேவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கிய பிறகு செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் சரவணன்,

‘‘வடகிழக்கு பருவமழையால் கடந்த வாரம் சென்னை தத்தளித்தது, அதுபோல இன்றைக்கு 50 ஆண்டுகால இல்லாத அளவில் தற்போது மதுரையில் மழை பெய்துள்ளது.இதன் மூலம் நரிமேடு, செல்லூர் பகுதிகளில் மக்கள் பாதிப்பு அடைந்தனர். ஏற்கனவே சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒவ்வொரு தொண்டர்களும் உதவ வேண்டும் என கழக பொதுச்செயளாலர் எடப்பாடியார் ஆணையிட்டார் அதனை தொடர்ந்து கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழிகாட்டுதல்படி தற்போது நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

கடந்த எடப்பாடியார் ஆட்சியில் ஏரி, கண்மாய் ஆகியவற்றை தூர்வாரியதால் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படவில்லை, ஆனால் தற்போது இந்த மூன்னறை ஆண்டுகளில் திமுக அரசு குடிமாரமத்து திட்டத்தை செய்யவில்லை. பல்வேறுக் கண்மாயிலிருந்து செல்லூர் கண்மாய்க்கு நீர்வரத்து வருகிறது இந்த செல்லூர் கண்மாய் மூலம் பந்தல்குடி கால்வாய் வழியாக தண்ணீர் வைகை ஆற்றுக்கு செல்லும்.

ஆனால் இந்த பந்தல்குடி கால்வாயில் கடந்த மூன்று ஆண்டுகளாக தூர்வரப்படவில்லை, ஏற்கனவே பந்தல்குடி கால்வாய்க்கு சுவர் விழுப்பி, மராமத்து செய்ய 2021, 2022 நிதி ஆண்டில் 75 கோடி மதிப்பீடு செய்தார்கள், அதனை தொடர்ந்து 2022,2203 ஆண்டில் 85 கோடி மதிப்பீடு செய்தார்கள் ஆனால் இன்றளவும் ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை. பந்தல்குடி கால்வாயில் சுற்றுச்சுவர் எழுப்பி இருந்தால் அதில் விழுந்து ஒருவர் உயிர் இழந்திருக்க மாட்டார்.

ஆனால் தொடர்ந்து அரசு மெத்தன போக்கை தான் கடைப்பிடித்து வருகிறது, தற்போது இந்த கனமழையால் ஆயிரக்கணக்கான வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் இனி அரசு நம்மை காப்பாற்றாது என்று மக்கள் வீட்டை பூட்டி பாதுகாப்பு இடத்துக்கு சென்று விட்டார்கள். மின்சாரம் தாக்கி பட்டத்தரசி ஒரு பெண்மணி பாதிப்படைந்தார் இதனை தொடர்ந்து எனது மருத்துவமனை மூலம் அவரை காப்பாற்றினேன்.

அமைச்சர்கள் ,நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் ஆகியோர் பாதிக்கப்பட்ட இடங்களை சென்று பார்க்கும் பொழுது மக்கள் கடுமையாக எதிர்ப்பை தெரிவித்து வருவதாக செய்திகள் வருகிறது. தொடர்ந்து ஆய்வு என்று விளம்பரம் செய்யாமல் மக்களை காக்க அரசு ஈடுபட வேண்டும். தொடர்ந்து மழையால் சாக்கடை நீர் கலந்து வருவதால் பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு, காய்ச்சல் ஆகியவை ஏற்பட்டு வருகிறது.

ஆகவே உடனடியாக மருத்துவமுகாமை பாதிக்கப்பட்ட பகுதிகளில் செயல்படுத்த வேண்டும். மேலும் மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கி நிவாரணமுகாமில் தங்க வைத்து, தேவையான உணவு, குடிநீர் மருத்துவம் ஆகியவற்றை செய்திட்டு மக்களை காக்கும் பணியில் ஈடுபட வேண்டும்’’ என கூறினார்

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.