நவம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை இந்தியா முழுவதும் மகாவீர் நிர்வான் தினம் கடைப்பிடிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தமிழக பொது சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக் கூடங்கள் நவம்பர் 1ம் தேதி (வெள்ளிக் கிழமை) மூடப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
ஜெயின் கோயில்களிலிருந்து 100 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் மூடப்படும். அந்நாளில் இறைச்சி விற்பனைக்கும் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.