பஞ்சாங்கம் அக்.28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
Dhinasari Tamil October 29, 2024 03:48 AM
செந்தமிழன் சீராமன் astrology panchangam rasipalan

||श्री:|| 

ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்

இன்றைய பஞ்சாங்கம் – அக்.28

श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

ஐப்பசி ~ 11 (28.10.2024) திங்கள் கிழமை*
வருடம் ~ க்ரோதி வருடம் {க்ரோதி நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ தக்ஷிணாயனம்
ருது ~ சரத் ருது.
மாதம்~ ஐப்பசி மாஸம் { துலா மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ 10.33 AM வரை ஏகாதசி பின் த்வாதசி
நாள் ~ {ஸோம வாஸரம்} திங்கள் கிழமை.
நட்சத்திரம் ~ 6.27 pm வரை பூரம் பின் உத்திரம்
யோகம் ~ ப்ராம்யம்
கரணம் ~ பாலவம்
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
ராகுகாலம்~ காலை 7.30 ~ 9.00.
எமகண்டம் ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
நல்ல நேரம் ~ 9.to 10.30am 5to.5.30 pm
குளிகை ~ மதியம் 1.30 ~ மாலை 3.00.
சூரியஉதயம் ~ காலை 6.08
சந்திராஷ்டமம் ~ மகரம்
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்.
ஸ்ராத்ததிதி ~ த்வாதசி
இன்று ~ ஏகாதசி
வாஸ்து நாள் ( 7. 42 m to 8.18 am )

स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु॥

!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
!!धर्मो रक्षति रक्षित:!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திங்கள் ஓரைகளின் காலம்

காலை

6-7. சந்திரன். சுபம்
7-8. சனி அசுபம்
8-9. குரு. சுபம்
9-10. .செவ்வா. அசுபம்
10-11. சூரியன். அசுபம்
11-12. சுக்கிரன். சுபம்

பிற்பகல்

12-1. புதன். சுபம்
1-2. சந்திரன். சுபம்
2-3. சனி அசுபம்

மாலை

3-4. குரு. சுபம்
4-5. செவ்வாய் அசுபம்
5-6. சூரியன் அசுபம்
6-7. சுக்கிரன். சுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..

இன்றைய (28-10-2024) ராசி பலன்கள்

மேஷம்

மேஷ ராசிக்கான பலன்கள் ..!

எதிர்காலம் சார்ந்த செயல் திட்டங்களை வடிவமைப்பீர்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். காப்பீடு துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். பொன், பொருட்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். மனம் விட்டு பேசுவதன் மூலம் புரிதல் அதிகரிக்கும். நிறைவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள் நிறம்

அஸ்வினி : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
பரணி : முன்னேற்றமான நாள்.
கிருத்திகை : புரிதல்கள் அதிகரிக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்கான பலன்கள் ..!

சிந்தனையில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். விவசாயம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்

கிருத்திகை : குழப்பங்கள் நீங்கும்.
ரோகிணி : முன்னேற்றமான நாள்.
மிருகசீரிஷம் : மேன்மையான நாள்.

மிதுனம்

மிதுன ராசிக்கான பலன்கள் ..!

மறைமுகமான தடைகளை வெற்றி கொள்வீர்கள். தொழில்நுட்ப கருவிகள் மூலம் ஆதாயம் ஏற்படும். இசை சார்ந்த துறைகளில் ஈடுபாடு உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் ஓரளவு குறையும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளில் தெளிவான முடிவுகள் கிடைக்கும். செயல்களில் திருப்தியான சூழல் அமையும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்

மிருகசீரிஷம் : ஆதாயகரமான நாள்.
திருவாதிரை : கருத்து வேறுபாடுகள் மறையும்.
புனர்பூசம் : திருப்தியான நாள்.

கடகம்

கடக ராசிக்கான பலன்கள் ..!

பெரியோர்களின் ஆலோசனைகள் மனதளவில் உத்வேகத்தை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கடன் நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும். மற்றவைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாக்குறுதிகள் அழிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். அசதி மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

புனர்பூசம் : உத்வேகமான நாள்.
பூசம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
ஆயில்யம் : சிந்தித்துச் செயல்படவும்.

சிம்மம்

சிம்ம ராசிக்கான பலன்கள் ..!

மனதில் புதுவிதமான செயல் திட்டம் பிறக்கும். எதிர்பாராத சில மாற்றங்கள் உண்டாகும். எழுத்து சார்ந்த துறைகளில் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சல் ஏற்படும். கால்நடை துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நேர்மறை சிந்தனையுடன் செயல்படுவது நல்லது. மனதளவில் இருந்துவந்த இறுக்கங்கள் குறையும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : மாற்றமான நாள்.
பூரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திரம் : இறுக்கங்கள் குறையும்.

கன்னி

கன்னி ராசிக்கான பலன்கள் ..!

குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல் மேம்படும். பயணங்களின் மூலம் மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வாழ்க்கை துணைவரிடம் அனுசரித்துச் செல்லவும். உத்தியோகப் பணிகளில் மற்றவர்களின் பணிகளை பார்க்க வேண்டிய சூழல் அமையும். கால்நடைகளிடம் கவனத்துடன் இருக்கவும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திரம் : புரிதல்கள் மேம்படும்.
அஸ்தம் : அனுசரித்துச் செல்லவும்.
சித்திரை : கவனத்துடன் செயல்படவும்.

துலாம்

துலாம் ராசிக்கான பலன்கள் ..!

தொழிலில் லாபகரமான சூழ்நிலை அமையும். துறைகளில் இருந்துவந்த குழப்பம் குறையும். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். சிந்தனையின் போக்கில் சில மாற்றங்கள் உண்டாகும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி அமைதி ஏற்படும். மூத்த உடன்பிறப்புகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

சித்திரை : குழப்பங்கள் குறையும்.
சுவாதி : வரவுகள் கிடைக்கும்.
விசாகம் : ஒத்துழைப்பான நாள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கான பலன்கள் ..!

மருத்துவத் துறைகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு மேம்படும். மனதிற்குப் பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கை துணை வழியில் ஒத்துழைப்பான சூழல் அமையும். உயர் கல்வியில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதுவிதமான கண்ணோட்டம் பிறக்கும். தன வருவாயை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

விசாகம் : மதிப்புகள் மேம்படும்.
அனுஷம் : சிந்தனைகள் ஏற்படும்.
கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசிக்கான பலன்கள் ..!

சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற மனநிலை பிறக்கும். தன வருவாயில் இருந்துவந்த தடைகள் குறையும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். அனுகூலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

மூலம் : செல்வாக்கு மேம்படும்.
பூராடம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
உத்திராடம் : முன்னேற்றமான நாள்.

மகரம்

மகர ராசிக்கான பலன்கள் ..!

மனதளவில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்படும். எதிர்பார்த்த தனம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் திட்டமிட்டு செயல்படவும். தொழில் சார்ந்த பயணங்களில் பொறுமை வேண்டும். வெளிப்படையான பேச்சுக்களால் நெருக்கடிகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : குழப்பங்கள் நீங்கும்.
திருவோணம் : பொறுமை வேண்டும்.
அவிட்டம் : அனுசரித்துச் செல்லவும்.

கும்பம்

கும்ப ராசிக்கான பலன்கள் ..!

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். சில அனுபவம் மூலம் புதிய கண்ணோட்டம் பிறக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அனுபவம் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : ஒற்றுமை மேம்படும்.
சதயம் : அனுபவம் கிடைக்கும்.
பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.

மீனம்

மீன ராசிக்கான பலன்கள் ..!

கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். சமூகப் பணிகளில் முன்னேற்றமான வாய்ப்பு ஏற்படும். முக்கிய முடிவுகளில் நிதானம் வேண்டும். மனதில் புதுவிதமான நம்பிக்கை உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.
உத்திரட்டாதி : நம்பிக்கை மேம்படும்.
ரேவதி : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

தினம் ஒரு திருக்குறள்

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை (1228)

– முன்னெல்லாம் இனியதாய்ப் போந்த ஆயன் குழல், இப்பொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய், அது வந்து என்னைக் கொல்லும் படையும் ஆயிற்று. நெருப்புப் போலச் சுடும் மாலைக் காலத்திற்கு இடையனின் புல்லாங்குழல் தூதாக வந்து பின் கொல்லும் படைக்கருவி போன்று வருத்தும் என்பது உரை.

மாயனாகிய இடையன் கண்ணபிரானின் புல்லாங்குழல் என்பதே அன்றைய சமூகத்தில் புகழ்பெற்றிருந்த அடையாளம். அதனையே இங்கே குறளில் கையாண்டார் வள்ளுவர்.

தினம் ஒரு திருமுறை

மறை – 2 பதிகம் – 61 பாடல் – 6

ஒளிகொண் மேனி யுடையா யும்ப ராளீயென்
றளிய ராகி யழுதுற் றூறு மடியார்கட்
கெளியா னமரர்க் கரியான் வாழு மூர்போலும்
வெளிய வுருவத் தானை வணங்கும் வெண்காடே.

விளக்கவுரை

ஒளி கொண்ட திருமேனியை உடையவனே! உம்பர்களை ஆள்பவனே! என்று அன்புடையவராய் அழுது பொருந்தும் அடியவர்க்கு எளியவன். தேவர்களுக்கு அரியவன் ஆகிய சிவபிரானது ஊர் வெண்ணிறமுடைய ஐராவதம் வணங்கி அருள் பெற்ற திருவெண்காடாகும்.

News First Appeared in
© Copyright @2024 LIDEA. All Rights Reserved.